Tuesday 1 July 2014

குர்ஆனை பற்றி கவிதைகள்! (1)

ஓர் துளி மட்டும் 
கடலில்லை!

ஆனாலும் 
ஓரு வேதமான திருக்குர்ஆன்
ஞானக்கடல் என்பது பொய்யில்லை!

சிந்தனையாளர்கள் 
இதனை படிப்பார்கள்!

அல்லது!

இக்குர்ஆனைப் படிப்பவர்கள் 
சிந்திக்க தொடங்குவார்கள் !
---------------------------
குர்ஆன் பிரதிகளனைத்தையும்
பதுக்கி வைத்தாலும் !

சில மணித்துளிகளின்
மற்றொரு பிரதி கிடைத்துவிடும் !

ஏனென்றால் 
குர்ஆன் காகிதங்களில்
வாழவில்லை !

மனித மனங்களில்
வாழ்கிறது!
------------------
தொட்டால் 
தீட்டு இல்லை!

படித்தால் 
பாவமில்லை!

திருக்குர்ஆன் எனும் 
இறைவேதம்!
யாருக்கும் பரம்பரை 
சொத்தும் இல்லை!

அந்த இறைமறை!
உலக பொதுமறை !
--------------------
மனிதர்கள் அனைவரும்
ஓர் ஆண் பெண்ணிலிருந்து வந்தவர்கள்!
இறைமறையின் கூற்று!

இதனாலேயே எதிர்க்கிறார்கள்
பிறப்பைச்சொல்லி மக்களைப்பிரிக்கும்
கூட்டமொன்று.!!
-------------------------------------

1 comment:

  1. சிறப்புக் கவிதை வெகு சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete