Tuesday 20 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும் ! (42)

நபிகளார் அவர்கள்

மஸ்ஜிதுன் நபவி எனும்-
பள்ளியை -
நிறுவினார்கள்!

போதித்தார்கள்!
ஒழுக்கம்!
பழக்கவழ்கக்கம்

அப்பள்ளி ஆனது-
ஆலோசனை இடமாகவும்!
அனாதைகளின் -
தங்கும் இடமாகவும் !

செய்தது-
எண்ணற்ற சேவைகளையும்!

சகோதரத்துவ -
ஒப்பந்தமும் நடந்தது!

அவ்வொப்பந்தம் -
எல்லைகளை கடந்து-
உள்ளங்களை பிணைத்தது !

உயிரின் பாதியை-
பிறருக்கு-
 கொடுக்க முடியுமானால்!

கொடுக்கவும்-
முனைந்தார்கள்-
உண்மை அன்பினால்!

சொத்துகளிலும்-
வாரிசுரிமை!

இறைகட்டளைக்கு -
பிறகே-
தவிர்க்கபட்டமை!

ஆன்மீக ஒழுக்கங்கள்-\
போதித்தார்கள்

அசிங்கத்தில் மூழ்கிருந்த-
அம்மக்களும்-
ஒழுக்கத்தால்-
ஜொலித்தார்கள்!

அடுத்ததாக !
மதீனம் திகழ வேண்டும்-
அமைதியாக!

அதனால் -
சுற்றிருந்த யூதர்களிடம்-
ஒரு உடன்படிக்கை!

அரசியல் நடவடிக்கை!

உடன்படிக்கை தொடர்ந்ததா!?
இடையில் முறிந்ததா!?


{தொடரும்.....}

           








1 comment: