Saturday 29 December 2012

முகலாயர்களே...(21)

கட்சியிலும்-
பங்கு!

ஆட்சியிலும்-
பங்கு!

இன்றைய-
அரசியல் -
தலைவர்களின்-
வாரிசுகளுக்கு!

கக்கூஸ்-
கட்டினாலும்!

பாதாள-
சாக்கடை-
கட்டினாலும்!

கமிசன்-
பங்கெடுக்குறான்-
ஒவ்வொரு ஆளும்!

காற்றலை-
ஊழலை-
ஊளையிடுறாங்க-
"கலாசார -
காவலர்கள்"!

"காவலர்களுக்கும்"-
பங்குள்ளதாக-
சி.பி.ஐ.தகவல்கள்!

குடும்பம்-
நடத்தவே-
பொண்டாட்டி-
இல்லை!

இதுல-
புள்ளைக்கு-
பேர்தேடுறவன்-
கதையா-
இல்ல!?

மின்  உற்பத்தி-
இல்லையின்னு-
சொல்றாங்க!

அப்ப-
என்னத்துக்கு-
இலவச மின் பொருட்கள்-
கொடுத்தாங்க!?

என்னமோ-
போங்க!?

இப்ப-
வரலாறுக்கு-
வாங்க!

தலைநகரில்-
புகுந்தது-
காட்டேரிகள்!

ரத்தங்களில்-
குளித்தும்-
அடங்கவில்லை-
வெறிகள்!

செங்கோட்டையை-
விட-
சிகப்பானது-
மணற்மேடுகள்!

சக்கரை-
மண்டியானது-
பள்ளிவாசல்கள்!

வாளுக்கு-
தீனியானார்கல்-
மன்னரின்-
உறவுகள்!

பிழைத்தது-
கடைசி-
இருவாரிசுகள்!

இருந்தார்-
மன்னர் -
சிறையில்-!

வருகிறது-
உணவைபோல்-
தாம்புல-
தட்டில்!

அதில்-
இருந்ததோ-
மன்னரின்-
இருமகன்களின்-
வெட்டப்பட்ட-
தலைகள்!

போராளிகள்-
இப்படிதான்-
காட்சியளிப்பார்கள்-என
கொக்கரித்து-
மன்னர்-
சிரித்தார்கள்!

நாட்டுக்காக-
அனைத்தையும்-
இழந்தார்கள்!

பொறுமை-
கொண்டார்கள்!

இவர்களா!?-
நாட்டின்-
துரோகிகள்!?
பாவிகள்!?

சுருக்கு கையிற்றை-
முத்தமிட்டு-
கிடைத்த -
சுதந்திரம்!

ஒரு சிலரிடம்-
மட்டும்-
சுருங்கிடவா!?-
அடைந்தோம்-
சுதந்திரம்..!!

(தொடரும்...)



4 comments:

  1. வலிமிக்க வரலாறாய் இருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. aathmaa sako!

      thodarnthuvarum-
      anoirkku mikka nantri!

      Delete
  2. அருமையான வரலாறை அழகான கவிதையாக்கி தருவதற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. suresh sako!

      thodarum anpirkku-
      mikka nantri!

      Delete