உன் நினைவுகளை
மலைமேல் மறைத்து வைத்திருந்தாலும்
அருவியாக கொட்டியிருப்பாய்..!
உன் நினைவுகளை
கடலினுள் கரைத்திருத்திருந்தாலும்
அலையின் நுரையாய் வெளிப்பட்டிருப்பாய்..!
உன் நினைவுகளை
வானத்தில் விதைத்திருந்தாலும்
விண்மீனாய் மின்னிருப்பாய்..!
உன் நினைவுகளை
பனை மரத்திற்கு உரமாக்கிருந்தாலும்
நுங்கில் நீராய் இனித்திருப்பாய்..!
உன் நினைவுகளை
தெரிந்தோ தெரியாமலோ
என் மனதிற்குள் புதைத்து வைத்து விட்டேன்
கண்ணீராய் கவிதையாய் கசிந்துக் கொண்டே இருக்கிறாய்..!!