Friday 7 April 2017

சுல்தான் மாமா 6



      கடைக்குள்ள ரெண்டு "சுத்துற"சேரு இருந்துச்சி.ஒரு நீளமான உக்காருர கட்டல் ஒண்ணு கெடந்துச்சி.பழய கடயில இருந்த ,ஒரு நாக்காலி மட்டும்
இன்னமும் பழய நெனப்புகள தாங்கிக்கிட்டு ,மவுனமா இருந்துச்சி.அப்பதான் மாமா கிட்ட கேட்டேன்."ஏம்மாமா்இந்த நாக்காலி வாங்கி எத்தன வருசம் இருக்கும்னு,!? "ம்ம் ...ஒரு நாப்பது வருசமாவது இருக்கும்பா.."என சொல்லிட்டு,அவுகளுக்கு வந்துருந்த,"இஞ்சி சாயாவ"கொவளயில ஊத்தி குடிச்சாக.."குடிக்கிறியாபா னு ஒரு வார்த்த கேட்டுட்டு.,நான் அவுக மகன் மூத்தவன கேட்டேன்.அவன் எங்க இருக்கான்னு..!?அவன் அரபு நாட்டுக்கு போனதா சொன்னதும்,எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சி..ஏன்னா..!?

        ஒரு ரெண்டரை வருசத்துக்கு முன்னால,நான் சிங்கபூர்ல வேலய வுட்டுட்டு,ஊர்ல ஏதாவது பொழப்பம்னு இருந்தேன்.அந்த நேரத்துல தான் சகுபரும் சவுதிய வுட்டுட்டு வந்திருந்தான்.அவன் என்னய போலதான் நெனப்புல இருந்தான்.ஆனா என்ன செய்ய நானும் மறுபடியும் சிங்கபூருக்கு வந்துட்டேன்.அவனும் அரபு நாட்டுக்கு போயிட்டான்.எரணமும்,மரணமும் இருக்குற எடத்த தேடி போயி தானே ஆகனும்...

    சாயாவ மாமா குடிச்சிட்டு,அடுத்து யாருப்பானு..!?கூப்புட்டாக.அங்க இருந்த பயலுவ மாமா கிட்ட முடி வெட்ட விரும்பல போல.,அப்புறம் என்னய கூப்டாக.நான் மறுப்பெதுவும் சொல்லாம,போயி உக்காந்து கிட்டேன்.தலயில தண்ணிய "புஸ்கு புஸ்கு"னு அடிச்சி விட்டு,முடிய கரீச்சி கரீச்சினு வெட்டயில,எத்தனயோ யாபகங்க செதறுச்சி...!!

(முற்றும்)


1 comment: