Tuesday 4 April 2017

சுல்தான் மாமா 5



    எங்க ஊர்ல ஒரு பழக்கம் இருக்கு .அது என்னனா ,இப்ப எனக்கு சுல்தான் மாமா முடி வெட்டுறாகனு வச்சிக்கங்க.எனக்கு மச்சான் "மொற"உள்ள ஆளு,ஒரு பத்து ரூபாயோ,நூறு ரூபாயோ ,எனக்கு முடி  வெட்டக் கூடாதுனு போட்டுட்டா,எனக்கு முடி வெட்டுனது பாதியிலேயே நிறுத்திருவாக.நான் எதிராளி போட்ட பணத்த விட,கூட ஒரு ரூபாயாவது போட்டாகனும்.இல்லனா பாதி தல தான்.இப்படி ஒரு வெளயாட்டு இருக்கு.

    ஒரு நாள் ஆசாத்து மச்சானுக்கு ,சுல்தான் மாமா முடி வெட்டிக்கிட்டு இருந்தாக.நானும்,அமீனும் அந்தப்பக்கம் போக,அமீனுக்கும் ஆசாத்து மச்சான் "மொற"வேணும்ங்குறதால,பணத்தை போட்டுட்டான்.மாமா முடி வெட்ட மாட்டேங்குறாரு.ஆசாத்து கோவப்பட்டு,அவுக அப்பா காதர்கனி அப்பாவ கூட்டி வந்துட்டாப்ல.ஆளாளுக்கு பேச பெரிய வம்பா போச்சி.அதோட பள்ளிவாசல்ல இருந்தவங்க .சத்தம் போட்டு ஒடுக்கி விட்டாக.எங்களோட சேத்து மாமாவுக்கும் திட்டு.

     சில மாசங்களுக்கு முன்னாலதான் ஊருக்கு போயிருந்தேன்.அப்ப முடி வெட்டலாம்னு மாமா கடைக்கி தான் போனேன்.மாமா ஒரு அப்பாவுக்கு "ஷேவிங்"கு பண்ணிக்கிட்டு இருந்தாங்க.பக்கத்துல அவுக ரெண்டாவது மகன் அஜ்மீரு ஒரு பயலுக்கு முடி வெட்டிக்கிட்டு இருந்தான்.ரெண்டு மூனு பேரு உக்காந்து இருந்தாங்க.அதுல ஒருத்தன் தம்பிக்காரன் உஸ்மான்.என்னய பாத்ததும்.,"இங்கேயும் வந்துட்டுயா...இன்னக்கி பொழுது உருப்பட்ட மாதிரிதான்"னு சொல்லி சத்தமா சிரிச்சான். "செருப்படி வாங்கப்போறா பாரு "னு நான் சொன்னதும்,ரொம்ப சத்தமாக சிரிச்சான்.நான் அடிக்க மாட்டேங்குற தைரியத்துல...


No comments:

Post a Comment