Monday 3 April 2017

சுல்தான் மாமா 4



     பதினேழு ,பதினெட்டு வயசு இருக்கும்போதே ,சகுபரு அவன் அத்தா கிட்ட தொழில ஓரளவு கத்துக்கிட்டான்.அதோட சுல்தான் மாமா சொந்தக்காரவுக,திருநெல்வேலி  பேட்டையில இருக்காங்க.அங்க இருந்தும் சில பசங்க முடி வெட்டி கத்துக்க இங்கே வருவாங்க.அந்த புதுப்பசங்களுக்கும்,சகுபருக்கும் எங்களப்போல ஆளுங்க தல தான்.ப்ளே க்ரௌண்ட்டு.ஒரு நாள் நான்,அமீனு,செய்யதுசேன்.மூனு பேருமா முடி வெட்ட போனோம். எனக்கு சகுபரு நல்ல வெட்டி விட்டான்.ஆனா செய்யதுசேன் தலயதான் ,பழக வந்தவன்,பதம் பாத்துட்டான்.குண்டும் குழியுமா முடிய வெட்டிட்டான்.அத பாத்து நானும்,அமீனும் ,கெடந்து சிரிக்க,கடுப்பான செய்யதுசேன்,கெட்ட கெட்ட வார்த்தையில திட்டி சண்டைக்கு போயிட்டான்.அதோட சமாதானப்படுத்தி சகுபரு .குண்டு குழியுமான அவந்தலய சரி செஞ்சி விட்டான்.இதுல மூக்கு முடிய வெட்ட வந்த ஆளோட,மூக்க வெட்டி விட்ட கதயெல்லாம் இருக்கு.

         குருதிப்புனல் கமலு ,தில்லு விக்ரமு,வெட்டுறதுக்கு முன்னாலயே,எங்க ஊர்ல நாங்க,போலீஸ் வெட்டுனு ,அந்த மாதிரி வெட்டிக்கிட்டு தெரிவோம்.ஒரு தடவ ,வண்ணாங்கம்மாயில சாராயம் வித்தவங்க,எந்தலய பாத்து ,போலீஸ்னு நெனச்சி,சாராயத்த மறச்சதும் உண்டு.

    அப்புறம் மாமாவ பத்தி சொல்லனும்னா,அவுக நாப்பது வருசத்து மேல,ஒப்பிலான் மாரியூருனு இந்த சுத்துவட்டாரத்துல பெரும்பாலான ஊர்ல மாமா தான் ,"சுன்னத்து"வச்சி விடுவாங்க.கொஞ்ச வருசத்துக்கு முன்னால,என்னோட வேல பாத்த இஸ்மாயில் மாமா,அவரோட மகனுக்கு ஊர்ல "சுன்னத்து"வச்சிட்டு வந்தாப்ல,அப்ப அவர்கிட்ட கேட்டேன்."ஏன் மாமா,சுல்தான் மாமா எத்தன பேருக்கு "சுன்னத்து"வச்சிருப்பாருனு."எப்படியும் ஆயிரக்கணக்குல வச்சிருப்பாருப்பா..எனக்கே நாப்பது வயசுக்கு மேல ஆச்சி..எனக்கும் "அறுத்துட்டு"என் மவனுக்கும் "அறுத்துட்டாருப்பா"னு சொல்லி அடக்க முடியாம சிரிச்சாப்ல.


1 comment: