Saturday 22 April 2017

நிஸாவின் கையெழுத்து 2



    எங்களுக்கு தமிழ்பாடம்,தமிழய்யா எடுப்பாக.தமிழய்யா பாக்க நல்ல வளத்தியா ,அதுக்கேத்த ஒடம்புமா இருப்பாக.தல முடிய "சோத்தங்கை" பக்கமா வாங்கெடுத்து சீவி,ஒரு சின்ன தூக்கனாங்குருவி கூடு மாதிரி,கும்மள் வச்சி இருப்பாப்ல.முரட்டு மீசையோட.அவரோட முடிக்கு காலம் வெள்ளை அடிச்சி இருந்துச்சி.இவரு "கருப்படிக்காம" விட்டுருந்தாப்ல.இங்லீஸ் பாடம் ஹெட்மாஸ்டர் எடுப்பாரு,அவருக்கு ரிடையர் ஆகுற வயசு.அப்புறம் கணக்கு வாத்தியாரு.இவர பத்தி கடைசியில சொல்லுறேன்.ஏன்னா ரொம்ப சொல்ல வேண்டி இருக்கு.அப்புறமா அறிவியல் பாடத்துக்கும்,வரலாறு பாடத்துக்கும் வாத்தியார் போடல கவர்மென்டு.இந்த ரெண்டு வாத்தியாருக்கும்,படிக்கிற பசங்கள்ட ,காசு பிரிச்சி சம்பளம் கொடுத்தாங்க.அறிவியல் வாத்தியாரு ,கொஞ்ச நாள்தான் வந்தாரு.வரலாறு வாத்தியாரு பேரு ஶ்ரீராம்.நல்லா சிரிக்க சிரிக்க பாடம் நடத்துவாப்ல.தளபதி,உழப்பாளி பட ரஜினி மாதிரி முடி வச்சிருப்பாரு.

      இப்ப கணக்கு வாத்தியார பத்தி சொல்லுறேன்.இவுக ஊரு முதுகுளத்தூர் பக்கத்துல இருக்குற "எளஞ்சம்பூரு".அதான் காமடி நடிகர் செந்திலு இருக்காப்லைல.!?அவரோட ஊரு.பேரு சக்கரபாணி னு சொல்லுவாங்க.சாரு ரொம்ப ஸ்ரிக்ட்,அடினா அடி பிரிச்சி மேஞ்சிருவாரு.மாரியூர் பள்ளிக்கூடத்துல நல்லா படிச்சவங்களுக்கும்,பாதியில ஓடுனவங்களுக்கும் ,சாரோட அடிதான் காரணம்னா பாத்துக்கங்களேன்.கணக்கு பாடம் நல்லா நடத்துவாக.எனக்கு கணக்கு பாடந்தான் புடிச்சாமான பாடம்.

      ஒரே வகுப்புல படிச்சாலும்,பொம்பள புள்ளைங்க கிட்ட பேச முடியாது.பக்கத்துல இருந்தாலும்,வெவ்வேற தீவுல இருக்குற மாதிரிதான்.அட்டெண்டன்ஸ்ல பேர வாசிக்கைலதான்,இது இந்த பொண்ணோட பேருனு தெரிஞ்சிக்கலாம்.இந்த சரிபு நிஸாவால எனக்கு ஒரு பிரச்சனை.அது என்னனா,என்னோட கையெழுத்து நல்லா இருக்காது.பரீட்சை பேப்பர  வாத்தியாருங்க திருத்தினா,நான் பதில் எழுதி இருந்தாலும்,கையெழுத்து சரியில்லனு திட்டுதான் விழும்.எனக்கு நேர் எதிரா,அந்தபுள்ள நிஸாவோட கையெழுத்து,ரொம்ப அழகா இருக்கும்.அதை காட்டியே,என்னை தமிழய்யா திட்டுவாரு.இல்லனா நிஸாவ பாராட்டும்போதெல்லாம்,என்னய ஒரு மாதிரியா பாப்பாரு.அப்போதெல்லாம் யாரோ "கையெழுத்து எப்படி இருக்கோ,அப்படிதான் ஒருத்தவங்களோட தலயைழுத்து இருக்கும்னு"சொன்னது.நெனப்புல வந்து குத்தாட்டம் போடும்.

(தொடரும்...)


2 comments:

  1. ஓ தமிழ்நாட்டுக்கு கையெழுத்து போல இனிதான் படிக்கனும் ! நலமா பாஸ் எப்படி இருக்கின்றீங்க சீனி!

    ReplyDelete
  2. சீனி கவிதை எப்போதும் தரமான நினைவுகள் தான்! எப்போதும் நினைப்பேன் இப்ப கொஞ்சம் தனிப்பட்ட பிசி அதனால் தான் வலைப்பக்கம் அதிகம் வரமுடியல[[ ஆனாலும் உங்க புரோபைல் மாற்றியது அறியேன்! தனிமரம் .கொம்மில் இப்ப [[

    ReplyDelete