Saturday 24 December 2016

எண்ணவில்லை வெண்ணிலவே..!


மூங்கில் காட்டினில் உனை காணுகையில்
தென்னைக்கீற்றுகளினிடையில் உனை தரிசிக்கையில்
கண்மாய் நீரில் நீ நீந்துகையில்
கடற்கரை மணலின்  படுத்திடுகையில் நீ எனை நனைத்திடுகையில்

எண்ணவில்லை
வெண்ணிலவே!

என்னவளாய் நீ என் கை கோர்த்திடுவாயென்று...!!

   

Friday 16 December 2016

சின்ன சின்னதாய் ..!(7)

"வாழ்தலை அர்த்தமாக்கிக் கொண்டால்,சாவின் மீதும் ஒரு ஆசை வரும்."


காலப் பெருவெளிதனில்
முயற்சியெனும் தூரிகைகளால்
உனது பெயரையும் வண்ணமாக தீட்டிடு!

"கடமை என்பது வேறு.தியாகம் என்பது வேறு.ஆனால் கடமையை செய்து விட்டுதான் ,நம்மில் பலர் தியாகம் செய்ததாக நினைத்துக் கொள்கிறோம் ."


"உழைப்பெனும் அட்சயப்பாத்திரத்தை மறந்து விட்டு,சூதாட்டமெனும் பிச்சைப்பாத்திரத்தை கையில் ஏந்தி அலைகிறார்கள் .நம்மில் சிலர்."

Monday 5 December 2016

சின்ன சின்னதாய் ..!(6)

"நாயை நடு வீட்டிலும்,பெற்ற தந்தை தாயை முதியோர் இல்லத்திலும் வைக்கும்,படித்த மேதாவிகள் வாழும் காலம் தான் இது.

"சம்பளப் பணத்தை குடும்பத்திற்கு கொடுத்து விட்டு ,சில்லறைக் காசுகளை தனக்கென வைத்துக் கொள்பவர்கள் தான் "வாப்பாமார்கள்."


"உங்களது பிள்ளைகளை செல்லமாக வளர்க்கிறேன் என்ற பெயரில் ,செல்லாத காசுகளாக்கி விடாதீர்கள்."

"தோற்கிறோம் என்பதற்காக முயற்சியை கை விடாதே! முயற்சியை கைவிடுவோமென்றால் வாழ்க்கையே தோல்வியாகி விடும்."

Sunday 4 December 2016

சின்ன சின்னதாய் ..!(5)

"பாறைக்குள்ளிருக்கும் சிற்பம் சிற்பியின் கண்களுக்கு தெரிவது போல்,வாழ்க்கையின் வெற்றி தன்னம்பிக்கை உள்ளவனுக்கே தெரிகிறது."


"வாழ்க்கைப் பயணத்தில் நல்ல வார்த்தைகளை சிந்தி விட்டு செல்லுங்கள்.ஒரு நாள் நாம் களைத்துப் போய் திரும்பிப் பார்க்கையில்,சிந்திய அவ்வார்த்தைகள்,நல்ல உறவுகளாக நம்மை பார்த்து புன்னகைக்கும் ."


"தூங்கி எழுந்ததும் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.ஏனென்றால் தூங்கிய எல்லோரும் எழுவதில்லை."


"உங்கள் குழந்தைகளை செதுக்குங்கள் தவறில்லை,அதற்காக செதுக்குகிறேன் என்ற பெயரில் ,சிதைத்து விடாதீர்கள்."