Wednesday 31 August 2016

ஈரம்..!! (சிறு கதை) (2)


     அதோடு விளையாட்டு நின்று விட்டு,வாய் சண்டை ஆரம்பித்து விட்டது.கோப வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளாக மாறியது.இனிமேல் இவர்கள் அடித்துக் கொள்வார்கள் என்ற பயத்தில் ,விளையாட்டை தன் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நூஹ் மாமா ,திடலை நோக்கி வந்து சத்தம் போட்டார்.

    "ஏம்பா...சும்மா ஜாலிக்குத் தானே வெளயாடுறீங்க....ஏஞ்சண்ட போட்டுக்கப் பாக்குறீங்க...கலஞ்சி போங்கப்பா..அசிங்கப்படுத்தாம...டேய் சித்திக்கு கெளம்பி போ..காசிம் ஒம்பயலுவல கூட்டிட்டு போ...."என சத்தம் போட்டார்.மாமா மேலே எல்லோருக்கும் மரியாதை உண்டு .அதனால் அவர்களால் ஒன்றும் எதிர்த்து பேசவில்லை.கலைந்துச் சென்று கழட்டி வைத்திருந்த சட்டையை எடுத்து மாட்டிக்கொள்ள ,ஆளுக்கொரு திசையை நோக்கி சென்றார்கள்.

     இவ்விரு அணியைச் சேர்ந்தவர்களும்,ஒப்பிலான் ஊரைச் சேர்ந்த அத்தனைப் பேர்களுமே,உறவினர்கள்தான்.ஏனென்றால்,பொண்ணு ,மாப்பிள்ளை எடுப்பது ,தொன்னூற்றொன்பது சதவிகிதம்,உள்ளூரிலேயே தான் எடுப்பார்கள்.இம்மக்கள் வெளிநாடுகளில்,சிங்கபூர் போன்ற நாடுகளில் வாழ்ந்தாலும்,தன் உறவுகளை மறக்காதவர்கள்.அதனடிப்படையில்தான்,இவ்விரு அணியினருமே,அண்ணன்,தம்பியாகவோ,மச்சான்,மாப்பிள்ளையாக, உறவுக்காரர்கள் தான்.ஆனாலும் இதுபோன்ற உரசல்கள் அவ்வப்போது நிகழ்வதுண்டு.

     கலைந்துச் செல்கையில்தான்,முடிந்த பிரச்சனையை , ஆசிப்பின் செயல் மூட்டி விட்டது.

(தொடரும்..)

1 comment: