Thursday 8 October 2015

எஸ்.டி.பி ஐ ன் வெற்றி.!


       எஸ்.டி.பி.ஐ ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில்,"ஏம்பா !?ஒங்களுக்குத் தேவையில்லாத வேல.." "இருக்குற கட்சி பத்தாதா !?நீங்க வேறயா "என்றும்,
அரசியல் "ஹலாலா !?ஹராமா..!?என்றும் ,பல்வேறான கருத்துக்களும்,விமர்சனங்களும்,ஏன் அவதூறுகள் கூட சுமத்தப்பட்டது.ஆனாலும் அக்கட்சியின் ஆரம்ப கால தலைவர்களிடம் ,நீண்ட தூர தொலைநோக்குப் பார்வை இருந்தது .அவர்களது உறுதியான நிலைபாடுகளில் ,அவர்களிடம் சரியான திட்டமிடலினாலும்,கட்சி வளர்ந்துக் கொண்டேச் சென்றது.இன்று இந்தியாவெங்கிலும் எஸ்.டி.பி.ஐ கொடியினை காண முடிகிறது.

    இக்கட்சியின் போராட்டங்கள் பன்முகத்தன்மை கொண்டது.விலைவாசி உயர்வு,மது ஒழிப்பு,தலித் சமூகத்திற்கெதிரான கலவரங்கள்,இலங்கையில் நடந்த இனப்படுகொலை ,இப்படியாக போராட்டங்கள் நடத்தியது இக்கட்சி.ஈழப் படுகொலையின்போது,காங்கிரஸும்,பா ஜ க வும் நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த வேளையில்,"நாங்கள் தான் தமிழ் மக்களின் பாதுகாவலர்கள்"என சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் தமிழக அளவில் போராட்டங்கள்,அறிக்கைகள் என சுருக்கிக் கொண்டது.ஆனால் அதே வேளையில் எஸ்.டி.பி.ஐ டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது,என்னைப் போன்ற மனிதத்தை நேசிப்பவர்களுக்கு ஆறுதலாக இருந்தது .பெருநாள் சந்திப்பு விழாவின் போது மு.க.ஸ்டாலின் அவர்கள்"எஸ்.டி.பி.ஐ ன் வளர்ச்சி பொறாமைக் கொள்ளச் செய்கிறது "என்று சொன்ன வார்த்தை ,எஸ்.டி.பி.ஐ ன் வளர்ச்சியை பறைசாற்றுவதாகவே உள்ளது.

      இந்த வேளையில்தான் ,இராமநாதபுரம் மாவட்டம்,வாலிநோக்க மக்களின் போராட்டத்தை உற்றுக் கவனிக்க வேண்டியுள்ளது .இம்மக்கள் கடல் அலைகளையும்,கடற்கரை உப்புக்காற்றையும் எதிர்த்து உழைக்க தயங்காத எம் சொந்தங்கள்,அம்மக்கள் உரிமை வேண்டி போராட்டக்களத்தில் நிற்பது ஆச்சரியமும்,அதிசயமாகவும் உள்ளது.ஆம் அவர்களுள் போராட்டக்குணத்தை விதைத்து,உரிமைகளை வென்றெடுக்க ஜனநாயகத்தின் வழிமுறையைக் காட்டி ,வழி நடத்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியைப் பாராட்டியேத் தீர வேண்டும். ஏனென்றால் போராட்ட அரசியல் நடத்தும் அரசியல் கட்சி,போராடும் மக்களை உருவாக்குவதுதான்,முதல் வெற்றி. அவ்விசயத்தில் எஸ்.டி.பி.ஐ வெற்றியடைந்துள்ளது.

"வாழ்த்துக்கள் !வாலிநோக்கம் மக்கா...!!

    

No comments:

Post a Comment