Wednesday 14 October 2015

ஒவ்வொரு பூவிலும் ஓர் வாசமாகிட உண்டு.!


         இறைவன் படைத்தப் படைப்புகளில் ,ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனித்தன்மையுண்டு.ஒவ்வொரு மலரிலும் வெவ்வேறு வாசங்கள் இருப்பதைப் போல,ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வெவ்வேறு திறமைகள் உள்ளது.ஆனால் மனிதர்களாகிய நாமோ,அடுத்தவரிடம் உள்ள கூலாங்கற்களைக் கூட ,பெரும்சாதனையாக பார்க்கும் நாம்,நம் கையிலிருக்கும் முத்துக்களை கவனிப்பதில்லை .இப்படியாக நாம் பார்க்க தவறிய ,உணர மறுத்த,மறந்திட்டவற்றில் ஒன்று.நம் பிள்ளைகள் .

        குழந்தையாக நம் பிள்ளைகள் இருந்திடும்போது ,கண்ணே ,மணியே என்று கொஞ்சும் நாம் ,வளர வளர ,நம் பாசத்திற்கு ஒரு திரைப் போட்டுக் கொள்கிறோம்.ஆம்!அக்குழந்தைகள் படிப்பிலோ,மற்றவற்றிலோ சிறப்பாக செய்ய முடியாவிட்டாலும் ,முடிந்தளவிற்கு வெற்றிகளையோ,மதிப்பெண்களையோ பெற்று வருகையில்,அக்குழந்தையை நாம் ஆதரிப்பதில்லை,அடுத்து இன்னும் சிறப்பாக செய்ய மாற்று வழிகளை அக்குழந்தைகளுக்கு காட்டுவதில்லை .ஆனால் முழு பழியையும் குழந்தையின்மேல் சுமத்திவிட்டு நாம் தப்பித்துக் கொள்கிறோம்.அதே வேளை குழந்தைகள் தவறு செய்துவிட்டாலோ,அதனால் வரும் கோபத்தை அடியாகவோ,வசைச்சொற்களாகவோ தாராளமாக பயன்படுத்தி குழந்தைகளெனும் காகிதத்தை கிழித்து எறிந்து விடுகிறோம்.


          குழந்தைகளைப் "பச்ச மண்ணு"என சொல்வார்கள் .அதனை காரணமில்லாமல் சொல்லவில்லை ,நம் முன்னோர்கள்.ஆம்!ஈரமான மண்ணை மண்பாண்டங்களாக வடிவமைத்து ,பயன்படானதாக ஆக்கிடுவது குயவன் பொறுப்பைப் போலவே,நம் பிள்ளைகளை ,மனித சமூகத்திற்கு பயன்பாடான குழந்தைகளாக வளரச் செய்வது ,வாழச் செய்வது நம் பொறுப்பாக உள்ளது.அதனைச் செய்திடாமல் ,பக்கத்து வீட்டு பசங்களோட ,நம் பிள்ளைகளை ஒப்பிட்டுப் பார்த்து திட்டித் தீர்க்காதீர்கள்.பக்கத்து வீட்டு பெற்றோர்கள் சமூக அந்தஸ்துள்ள மருத்தவராகவோ,பொறியியலாளராக இருக்கும் பட்சத்தில்,நம் பிள்ளைகள் நம்மை பார்த்து "நீங்க ஏன் அவர்களைப்போல"!?இல்லையென கேள்வி எழுப்பினால்,நம் முகத்தை நாம் எங்கே வைத்துக் கொள்ள முடியும்.ஆதலால் தான் சொல்கிறேன்.
"ஒவ்வொரு பூவிலும் ஓர் வாசம் உண்டு!ஒவ்வொரு உயிர்க்குள் ஓர் திறன் உண்டு!!"

     

No comments:

Post a Comment