Thursday 3 September 2015

கல்லானாலும் கணவனா .!?


                 "ஏன்டி .!?நான் ஆம்பளடி அப்படித்தான் செய்வேன் ..!ஒனக்கென்ன !,?ஒழுங்க பொத்திக்கிட்டு இருக்க முடிஞ்சா இரு......."".....""இப்படியான வார்த்தைகளை ஏராளமாக,தாரளமாக கேட்க முடிகிறது.சில இடங்களில்.


       மேலும் சிலரோ,இரண்டு,மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள மட்டுமே,"காரணமாக"இருந்து விட்டு,தன் மனைவிக்கோ,தன் மக்கள்களுக்கோ செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விட்டு,வெறுமனே சோற்றுக்குத் தண்டமாகவும்,பூமிக்கு பாரமாகவும் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட ஒரே காரணத்திற்காக பெண்கள் வேலைக்குச் சென்று ,குடும்பப் பாரத்தைச் சுமக்கிறார்கள்.தன் பிள்ளைகளுக்காகவும்,தன் மானத்துடன் வாழ்வதற்காகவும்.

          ஆண் என்பவன் கூடுதல் வலிமையுடன் படைக்கப்பட்டுள்ளான்.அவ்வலிமையைக்கொண்டு தன் குடும்பத்தை,தான் சார்ந்திருக்கும் மனித சமூகத்தை மேம்படுத்தவே,அவ்வலிமையைப் பயன்படுத்தியாக வேண்டும்.அப்படி எவனோருவன் வாழ்கிறானோ ,அவன்(ர்) தான் ஆண்மகனாகத் திகழ்கிறான் .

"பெற்றவளையும்
கட்டியவளையும்
கண்ணீருடன் வைத்திருப்பவன்!

ஆம்பிள்ளையென்று சொல்லதே!
உதட்டின் மேல் மீசை இருப்பதால்!"என்று நான் என்றோ எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது.

ஆண்களே!
                கல்லாய்தான் இருப்பேன் என்றால்,ஏதாவது ஒரு கல்லை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் .மென்மை கொண்ட பெண்மையை நசுக்குவது ஆண்மைத்தனமல்ல,அது அடி முட்டாள் தனம்!

    

1 comment:

  1. சிந்திக்கவைக்கும் விடயம் சகோ!

    ReplyDelete