Friday 7 August 2015

மறந்தேனா...!!?

மேகத்தினுள் நிலவு
ஒளிகையில்!

விண்மீன்கள் கண் சிமிட்டிச்
சிரிக்கையில்!

பூக்களில் மழைத்துளிகள்
தங்கி இருக்கையில்!

கடலலையில் கால்கள் 
நனைத்து நடக்கையில் !

போர்வையின் இதத்தினை
தேகம் உணர்கையில்!

மழலையின் முடிதனை
கோதி விடுகையில்!

கத்தும் குயிலின் சோகத்தை
உணர்கையில்!

உன்னைத்தான் நினைக்கிறேன்
என்னவளே!!

உன்னை நான் பிரிந்தேன் என்பதினால்
திட்டித் தீர்த்திடு!

பொறுத்துக் கொள்கிறேன் !

ஆனால்
நான் உன்னை மறந்துவிட்டேன் என
ஒரு கணமும் எண்ணிடாதே!

      

2 comments:

  1. வணக்கம்,
    ஆனால்
    நான் உன்னை மறந்துவிட்டேன் என
    ஒரு கணமும் எண்ணிடாதே!.............
    உண்மையே,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete