Sunday 2 August 2015

அதன் பேர் மனசாட்சி இல்லடா.....!!

அடக்குமுறைகள்
கட்டவிழ்த்து விடப்பட்டாலும்!

நியாயக் கழுத்துக்கள்
தூக்கு கயிறுகளில் தொங்கினாலும்!

பாலுறுப்புகள் சூலாயுதங்களால் 
குத்திக் கிழிக்கப்பட்டாலும்!

வன்புணர்வுகளால் 
சாவின் விழும்பினைத் தொட்டாலும்!

மனிதம் மண்ணோடு மண்ணாய்
மடிந்துப் போனாலும்!

பாதிக்கப்படுவது மனிதம்தான் என
எண்ணாமல்!

பாதிப்புக்குள்ளான சமூகத்தின்
மதத்தைப் பார்த்து
சாதியைப் பார்த்து
மொழியைப் பார்த்து
உன் மனம் கொதிக்குமேயானால்!

அதன் பேர் மனசாட்சி இல்லடா 
மயிருகளா ..!!!

//"மயிருகளா "எனும் தடித்த வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை ,ஆனாலும் ஆதங்கத்தை வெளிப்படுத்த இதைவிட நாசுக்கான வார்த்தை எனக்குத் தெரியவில்லை //

No comments:

Post a Comment