Saturday 29 August 2015

கவிதையே..!!(81-85)


81)
உன் கன்னக்குழியில்
ஒளிந்துக் கொள்ள விரும்பும்!

ஓர் மழைத்துளி நான்!
-----------------------
கவிதையே..!!(82)
--------------------
நதிதனைத் தேடும்
சமுத்திரமாய்!

சமுத்திரத்தைத் தேடிவரும்
நதியாய்!

கவிதையே!
நீயும்
நானும்.!
------------------------
கவிதையே..!!(83)
------------------
என் கவிதையின் 
ஊற்றுக்"கண்"ணினை!

கருப்புத்திரையினால் 
மறைத்து விட்டு!

காதல் கவிதை கேட்கிறியேடி
கொடுமைக்காரி!
---------------------------
கவிதையே..!!(84)
------------------
என்னையெழுதிட 
பேனா எடுத்தால்
கல்லெறிந்த புறாக்கூட்டமாகவும்!

உன்னையெழுத முனைகையில் 
சீனியை மொய்க்கும் எறும்புகளாகவும்!

என்னிடம் கண்ணாமூச்சி 
ஆடுகிறது வார்த்தைகள்.!
-----------------------------
கவிதையே..!!(85)
------------------
எனக்கு மட்டுமேத் தெரியும்!

உன் நினைவுகளோடு வாழ்வது!

எத்தனைக் கொடுமையானதென்பது!
------------------------------------

No comments:

Post a Comment