Saturday 22 August 2015

கவிதையே..!!(76-80)


76)
உன்னைப் படித்திடும்போது
என்னையும்!

உன்னை எழுதிடும்போது
என்னவளையும் பார்க்கிறேன்!
-----------------------------
கவிதையே..!!(77)
------------------
நீ போதைத் தராத
மதுக்குடுவை!

மதி மயங்கச் செய்யும்
மங்கையின் பார்வை!
------------------------
கவிதையே..!!(78)
------------------
காட்டில் மானையும்
முக்காட்டில் உன்னையும் காண்கையில்!

நெஞ்சுக்குள் பெரும்நெகிழ்வு
கவிதையை உருவமாக கண்டதுபோல்!
---------------------------------------
கவிதையே..!!(79)
-----------------
நன்றிக் கெட்ட என் பேனா !

என்னை எழுதச் சொன்னால்!
உன்னைத்தான் அது எழுதுகிறது !
---------------------------------
கவிதையே..!!(80)
------------------
உன்னை எழுதவில்லை என்பதற்காக!

உன்னை நினைக்கவில்லை என்று
அர்த்தமில்லை !
--------------------------------

1 comment: