Friday 14 August 2015

கவிதையே..!!(66-70)


66)
படிக்கல் என்மேல்
பட்டாம்பூச்சியாய் நீ ஒட்டியிருந்தும்!

உலகம் ஏனோ மறுக்கிறது 
எனக்கும் உணர்வுகள் இருப்பதை..!!
---------------------------------------
கவிதையே..!!(67)
------------------
"குட்டியச் சுவரு"என் மேலும்
பொன்வண்டுகள் மொய்க்கிறதென்றால்!

மல்லிகைச் செடியாய் நீ
என்னில் முளைத்திருப்பதினால்தான்.!
----------------------------___---------
கவிதையே..!!(68)
-------------------
நீ ஒரு நாள்
என்னை வாசித்தால் உணர்வாய்!

என் முரட்டு மீசைக்குள்
உனக்கான நேசத்துளிகள் இருப்பதனை !
----------------------------------
கவிதையே..!!(69)
------------------
உன்னை 
நான் கையில் பிடித்துக்கொண்டு
கடந்து வந்த பாதையை 
வெறித்துக்கொண்டும்!

இனி 
கடந்திட இருக்கும் பாதையை
சிரித்துக்கொண்டும் பார்க்கிறேன்!

"கவிதையே"!
-------------------------------
கவிதையே..!!(70)
----------------
பூ வாசக் காற்றே
உன்னை நான் நேசிப்பதால்!

சுவாசக் காற்றை 
நான் வெறுத்து விட்டேன் என்று அர்த்தமில்லை!
----------------------------


1 comment: