Saturday 8 August 2015

சிங்கபூர்!(50)

விருட்சமான விதை நீ!

மணக்க மறுக்காத மல்லிகை நீ!

வறுமைப் பறவைகளை அரவணைக்கும் வேடந்தாங்கல் நீ!

உழைக்கத் துணிந்தவர்களை உயர்த்திப் பார்க்கும் தாயுள்ளம் கொண்டவள் நீ!

திறனாளர்களைக் கரம் பற்றி அணைக்கும் நட்பு நீ!

சச்சரவுப் பிள்ளைகளை பெற்றிடாத தாய் நீ!

ஐம்பதாவது சுதந்திரத்தினத்தில் இன்று நீ!

இந்த அற்பனும் வாழ்த்திட ஆசைக்கொள்ளும் அன்னை  நீ!


2 comments: