Friday 31 July 2015

கவிதையே..!!(56-60)


56)
நாமிருவர் எழுதிய
காதல் "கவிதையே"!

இன்று
குழந்தையாக உயிர்ப்பெற்று சிரிக்கிறது
நம் கைகளிலே!
------------------------------
கவிதையே..!!(57)
------------------
நீ
திட்டத் திட்ட 
நான் கவிதை சொல்வேன்!

ஏனெனில்
எனக்கு இன்னும் திகட்டவில்லை
"கவிதையே"!
------------------------------
கவிதையே..!!(58)
-------------------
கண்ணை மூடி தூங்கென்று
என்னைச் சொல்பவர்களுக்குத் தெரியாது!

நான் கண்களை மூடிக் கொண்டும்
உன்னைத் தேடுவேன் என்பது!
--------------------------------
கவிதையே..!!(59)
------------------
காலம் கடந்து
தாய்மை அடைந்தவளின்
மன நிலைதான் எனக்கும்!

நான் காதல் கவிதை 
எழுதிடும்போதெல்லாம்!
-----------------------------
கவிதையே..!!(60)
----------------
என்னை விட்டு 
நீ பிரிந்துப் போனாலும்!

சிரிப்புடனேயேப் போ
கவிப்பூவே !

வேண்டுமென்றால்
உனக்கும் சேர்த்து 
நான் அழுதுக் கொள்கிறேன்!
------------------------------

1 comment: