Thursday 4 June 2015

கவிதையே.!(31-35)


31)
உன்னை எல்லோரும் 
அமைதி நதியில் தேடிக்கொண்டிருக்கையில்!

நீயோ
அடுப்படியில் கிடக்கும் 
என்னை அணைத்துக் கொண்டிருக்கிறாய்..!!
----------------------------
கவிதையே.!(32)
-----------------
நீயாக
நான் வாழ ஆசைக்கொண்டதால்!

ஒரு நாளும்
என்னைப்போல் நீ வாழ 
ஆசைக் கொண்டிராதே.!
------------------------------
கவிதையே.!(33)
------------------
உன்னுள் எரிந்து
என்னைப் புதுப்பிக்கிறேன்!

நெருப்பிலிட்ட வெண்சங்கைப் போல்!
----------------------------------------
கவிதையே.!(34)
-----------------
சருகுகளாக 
சாலையோரத்தில் மிதிப்பட இருந்த
எனது சிந்தனைகளை!

கவிதையெனும் 
காகித மடிப்பில் வைத்துப் பார்த்தால் 
காட்சியளிக்கிறது பூங்கொத்தாக..!!
--------------------------------------
கவிதையே.!(35)
-----------------
ஓர் புள்ளியில் தொடங்கிய
நீள்கோடு நாம்!

ஓர் முனை நீ!
எதிர்முனை நான்!
--------------------

2 comments: