Saturday 8 November 2014

கருப்புப் பருக்கை..!!

மணமில்லாதப் பூவை
மல்லிகையில் தேடுவதைப் போல்!

கருப்புப் பருக்கையை
சோற்றுப்பானையில்  தேடுவதைப் போல்!

காயமில்லாதவர்களை
போர்களத்தில்  தேடுவதைப் போல்!

நுரைகளில்லாத அலைதனை
கடலலையில் தேடுவதைப் போல்!

நீலமில்லாதப் பகுதியினை
நீளவானில் தேடுவதைப் போல்!

நிழல் விழாத உருவப்படிமங்களை
நிலம்தனில் தேடுவதைப் போல்!

மனிதச் சமுத்திரத்தில்
கவலையில்லாத மனிதர்களைத் தேடுவது..!!

     

2 comments:

  1. நமக்குள்ளே இருப்பவனை எங்கே போய் தேடுவது :)

    ReplyDelete

  2. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete