Wednesday 15 October 2014

இந்தியா தூய்மையாகிட....!!

மதவெறிகளை மாய்த்திட வேண்டும்!

தீண்டாமையை தீயிலிட வேண்டும்!

பெண் வன்கொடுமையாளர்களைத் தூக்கிலிட வேண்டும்!

மதுபானக்கடைகளுக்கு திறக்காத பூட்டை மாட்ட வேண்டும்!

வரதட்சணையாளர்களை ஆண்மையற்றவர் என அழைக்க  வேண்டும்!

மத,சாதிவெறிப் பேச்சாளர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும்!

பொய்யைப் பரப்பும் ஊடகங்களை ஊமையாக்கிட வேண்டும்!

ஆள்பவனையும்,ஆளப்படுபவனையும் ஒரே மாதிரி பார்க்கும் சட்டங்கள் வேண்டும்!

கல்விக்கூடங்கள்,மருத்துவங்களும்  இலவசமாக வேண்டும்!

அதிகாரவர்க்கம்,அடிமைவர்க்கம் எனும் சொல்லே இல்லாமலாக வேண்டும்!

விவசாயிகளை புனிதர்களாக மதிக்க வேண்டும்!

ஊழல் அரசியல்கட்சிகளுக்கு
நிரந்தரத்தடை  விதிக்க வேண்டும்!

இத்தனையும் நடந்திட மனிதத்தை  நேசிப்பவர்கள் ஆட்சியாள வேண்டும்!

         

2 comments:

  1. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete