Monday 14 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!!(8)

இறைமறையை
புரிந்தால் !

வறுமைக்கு பயந்து
கருவை கலைக்க மாட்டார்கள் !

வரதட்சணை பயத்தால்
கள்ளிப்பால் ஊற்றமாட்டார்கள்!
---------------------------------
மத வெறி!
இன வெறி!

மொழி வெறி!
தேச வெறி!

இப்படியான
வெறிகளையெல்லாம்!

அறுத்து எறிந்திடும்
குர்ஆன் வரிகள்!
--------------------------
குர்ஆனின் சட்டங்கள் !

ஆண்களுக்குத்தான்
கடுமையானது!

பெண்களுக்கோ
மென்மையானது!

இதனையறியாமல்
ஊரு,உலகம்
என்னன்னமோ பேசுது.!
-----------------------
ஓர் உயிரின்
உன்னதம் புரிய..!

அதற்கு படித்திருக்கனும்
இறைமறையை.!
---------------------
 

1 comment:

  1. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்

    ReplyDelete