Saturday 12 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!! (6)

தன்
தாயையோ
தாரத்தையோ..!

தன்
பெண்மக்களையோ..!!

கிஞ்சிற்றும்
வெறுக்கமாட்டார்கள்!

இறைவசனங்களை
நேசிப்பவர்கள் !
------------------
நான் செய்யும்
தவறுகளுக்கெல்லாம்
நானே பொறுப்பு !

ஆனால்
நான் ஓர் தூசியளவு
நற்செயல் செய்தாலோ.!?

அது
இறைமறை
எனக்குள் ஏற்படுத்திய
பாதிப்பு.!
-------------------------
அநியாயக்காரர்களிடம்
அடங்கி போக மாட்டார்கள் !

ஆனாலும்
அநியாயக்காரர்களிடமும்
அப்பாவிகளிடமும்
அத்துமீற மாட்டார்கள் !

அவர்கள்தான்
குர்ஆனின் வசனங்களை
படித்து புரிந்தவர்கள் !
---------------------------
மன்னாதி மன்னரும்
துறவிப்போல் வாழ்வார் !

மண் வீட்டுக்காரரும்
செல்வந்த மனநிலையில் வாழ்வார்!

குர்ஆனின் வசனங்கள்
மனதில் செய்யும் மாற்றங்கள்
பலவுண்டு!

மேலே குறிப்பிட்டது
அதிலொன்று.!
-------------------------
   

1 comment:

  1. அறிந்துகொண்டேன் அருமையான வாசகங்களை! நன்றி!

    ReplyDelete