Thursday 3 July 2014

குர்ஆன் பற்றிய கவிதைகள் {2}

கடல்தனை
கரையிலிருந்தும்
ரசிக்கலாம் !

விருப்பபட்டால்
கடலோடு பயணிக்கலாம் !

அதனை தவிர்த்து விட்டு
கடலை திரையிட்டு
மறைக்கலாகுமா..!?

கடலைப்போலவேதான்
திருக்குர்ஆனும் !
-----------------
மாம்பழத்தினை
மண்பானைக்குள்
ஒளித்து வைத்தாலும்!

அறை முழுக்க
மணக்கத்தான் செய்யும்!

அதுபோலவே
இத்திருமறையினை
அவதூறுகளால் மறைக்க முயல்கிறார்கள் !

ஆனாலும்
உலகமெங்கும்
"சத்திய வாசம்"வீசவே செய்கிறது!
---------------------------------
மெய்ஞ்ஞானம்!
விஞ்ஞானம் !

இவைகளின்
இருப்பிடம்!

படித்திராதவர்கள்
ஒரு முறையாவது
படித்துப்பார்த்தால்
உண்மை புலப்படும் !
-------------------
ஆயிரத்து நானூறு
ஆண்டுகள் மேலாகியும் !
ஓர் எழுத்துக்கூட
மாறவில்லை !

இனி எத்தனை
ஆயிரம் ஆண்டுகளானாலும்
ஓர் புள்ளிக்கூட
கூடிட போவதில்லை !

அதிசயம்தான்!
ஆச்சரியம்தான்!

சத்தியமாக
இது இறைவேதம்தான்!
------------------------

1 comment:

  1. மாம்பழத்தை மண்பானைக்குள் ஒளித்துவைக்க முடியாது! சத்தியமான வார்த்தைகள்! அருமை! தொடருகிறேன்!

    ReplyDelete