Sunday 29 June 2014

விஷேச நாட்கள் !

ஊரு ,உலகமே
மகிழ்ந்திருக்கும்
விஷேச நாட்களில்!

ஒவ்வொரு வீட்டிலும்
இரு கண்கள் மட்டும்
கலங்கி இருக்கும்!

அது
விரும்பியோ
விரும்பாமலோ!

தன் பிள்ளைகளை
பிரிந்திருக்கும்
தாயின் கண்கள் !!



1 comment:

  1. உண்மை தான்....

    அந்த சோகம் சொல்லில் வடிக்க முடியாதது.

    ReplyDelete