Wednesday 26 March 2014

பிறந்த பூமி !(34)

''கிரசியானி அவர்களே!

யார் இஸ்லாத்திற்கு வர வேண்டும்!
யார் வர கூடாதென்றும்!-
சொல்வதற்கு!

யாருக்கும் உரிமை இல்லை!
யாருக்கும் அருகதையும் இல்லை!

நீங்கள் இஸ்லாத்தை தழுவுவதால்-
இத்தாலியர்கள் -
உங்களை துரோகி என்பர்!

முசோலினி -
உங்களை கொல்லவும் துணிந்திடுவார்!

உங்கள் குடும்பத்தின் நிலமை.!?

உணர்ச்சிவசப்படாமல் சிந்திப்பது உங்கள் கடமை!-
என்றார்!

கிராசியானி தொடர்ந்தார்!

''உமர் அவர்களே!
நான் இன்று எடுத்த முடிவல்ல இது!

உங்களை பாலைவனத்தில் சந்தித்ததிலிருந்து இஸ்லாத்தின்பால் எனது தேடல் தொடங்கியது!

இத்தாலியர்கள் தாக்கினால்தான்!

நீங்கள் தாக்கினீர்கள்!

போராட்டத்திலும் ஓர் கட்டுபாடு!
போராட்டத்திற்கான உறுதிப்பாடு!

இவைகளெல்லாம்தான் பல கேள்விகளையெழுப்பியது-
என் மனதோடு!

நபிகளாரின் வாழ்க்கையை படித்தேன்!

நபிகளாரின் தோழர்கள் வாழ்க்கையை படித்தேன்!

நபிகளார் நடத்திய போர் முறைகளை படித்தேன்!

அன்றைய நபிகளாரின் போர்முறைகளை -
உங்களது போராட்டக்களத்திலும் கண்டேன்!

பிறகே தெளிந்தேன்!

எனது குடும்பத்தினரிடம் சொன்னேன்!

ஆதரவையே கண்டேன்!

இது உணர்ச்சிபூர்வமான முடிவல்ல!
உணர்வுபூர்வமான முடிவு!

உமர் தொடர்ந்தார்!

''பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்!

லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி!

அதன் பொருளானது!
''அளவற்ற அருளானனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை.முஹம்மது நபி (ஸல்)அவர்கள் இறைவனின் இறுதி தூதராவார்கள்!

அரபி மொழியிலும்-
அர்த்தத்தையும்-
உமர் மூன்று முறை சொல்லிக்கொடுத்தார்!

''முக்தார் அலி''என பெயர் சூட்டினார்!

கிராசியானி ,முஸ்லிமானார்!

முக்தார் அலி (கிராசியானி) தொடர்ந்தார்!

''எனது குடும்பத்தினை  இஸ்லாத்தை பகிரங்கமாக ஏற்கச்செய்வேன்!

எனது முடிவையும் பகிரங்கப்படுத்துவேன்!

போராளிகள் என்னை போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வழி வகுப்பேன்!

உமர் சொன்னார்!

''வேண்டாம்!
இப்படி நீங்கள் செய்தாலும் என் நண்பர்கள் உங்களை நம்ப மாட்டார்கள்!

இதில் சூழ்ச்சி உள்ளதாக எண்ணுவார்!

உங்களது குடும்பத்திற்கு நான் ''சொல்லியதை'' சொல்லிக்கொடுங்கள்!

மறைமுகமாக இவ்விஷயத்தை வைத்திருங்கள்!-என்றுரைத்த
உமர் முக்தார்!

தொடர்ந்து சொன்னார்!

யாரை சந்திக்கனும்!
என்ன ரகசிய வார்த்தை சொல்லனும்!

விவரித்தார் உமர் முக்தார்!

முக்தார் கேட்டுக்கொண்டிருந்தார்!

வரும்போது கிராசியானியாக வந்தார்!

போகும்போது முக்தார் அலியாக செல்கிறார்!

(தொடரும்...!!)

4 comments:

  1. உமர் முக்தார் சொன்னது ரகசியமாக உள்ளது சுவாரஸ்யம்...

    ReplyDelete
  2. அவர் என்ன சொல்லி அனுப்பினார்... தெரிந்து கொள்ள நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. அடுத்து? தொடர்கிறேன்!

    ReplyDelete