Wednesday 26 February 2014

பிறந்த பூமி !(6)

முன்னே சென்ற குதிரை வீரர்கள் தோட்டத்தில் நுழைந்தார்கள்!

பின்னே சென்ற ராணுவ வீரர்கள் தோட்டத்தை அடைந்திட நடந்தார்கள்!

சிறு குழுவுடன் கிராசியானி தூரத்திலிருந்து கண்காணித்தார்!

சற்று நேரத்தில் திகைத்தார்!

பள்ளத்தாக்கிலிருந்து சர சரவென வந்தார்கள் போராட்டக்காரர்கள்!

'தட தட ''வென சுட்டார்கள்!

பட் பட்டென தாக்கினார்கள்!

'என்ன நடக்கிறது' என-
எண்ணுவதற்குள் -
ராணுவ வீரர்கள் செத்தார்கள்!

தூரத்திலிருந்து பார்த்தவர்கள்-
உறைந்தே போனார்கள்!

கிராசியானி முன்னிருந்த கேள்வி!

ஒளிவதா!?
போராடி அழிவதா.!?

போராடி சாவது -என
முடிவெடுத்தார்!

சிறு குழுவுடன் முன்னோக்கி சென்றார்!

ஆனால் -
போராட்டக்காரர்கள்!

வீரர்களின்-
ஆயதங்களை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்!

அருகில் வந்த கிராசியானி!

துயரத்தை வெளியேற்றினார்-
கண்ணீர் வழி!

குற்றுயிராக கிடந்தவர்கள்-
முணங்கினார்கள்!
''தண்ணீர்''!
''தண்ணீர்!''

வந்தவர்கள்-
கண்களின் வழி!
''கண்ணீர்''
''கண்ணீர்''!

வீரர்கள் கடைசி ஆசை -
நிறைவேற்ற!

துணிந்தார்கள்-
தன் உயிர்களையே பகடைக்காயாக மாற்ற!

ஆயுதத்தை தாங்கி கொண்டார்கள்!

தோட்டத்திற்குள் நுழைந்தார்கள்!

தண்ணீர் எடுக்க வந்த-
குதிரை வீரர்கள்!

கைகள் கட்டபட்டு-
கழுத்து அறுக்கப்பட்டு-
''ஹாயாக'' செத்துக்கிடந்தார்கள்!

நல்லவேளை போராட்டக்காரர்கள்-
கிணற்று வாளியை எடுத்துச்செல்லவில்லை!

இதனால்-
கிராசியானி உள்ளம் குளிராமல் இல்லை!

அள்ளினார்கள்!
தண்ணியை!

அருந்தினார்கள்-
தண்ணியை!

அன்றுதான் உணர்ந்தார்கள்-
தண்ணீரின் அருமையை!

அள்ளிய தண்ணீருடன் விரைந்தார்கள்!

வீரர்கள் தாகம் தீர்க்க விரைந்தார்கள்!

ஆனால் புண்ணியமில்லை!

அநேகமானோர் உயிருடன் இல்லை!

விரல் விட்டு எண்ண கூடியவர்கள்!

காயத்தோடும் ,மணலோடும் உழன்றார்கள்!

தூக்கிக்கொண்டு பயணித்தார்கள்!

நெஞ்சமெங்கும் அவமானத்தை சுமந்து சென்றார்கள்!

வீரர்கள்-
ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் பலி!

தீயை கொழுத்தியதுபோலானது-
கிராசியானி நெஞ்சுக்குழி!

இத்தாலிக்கு கிராசியானி புறப்பட்டார்!

முசோலினை சந்தித்தார்!

''டம் டம்''-என
முசோலினி மேஜை குத்தினார்!

''அவமானம்!
கேவலம்!
உன்னை தலையை அறுத்தால் என்ன!?-
முசோலினி வினவினார்!

(தொடரும்..!!)




4 comments:

  1. அவர் இருந்திருந்தால் மட்டும் என்ன செய்திருக்க முடியும்....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. பரிதாபம்தான் மேலிடுகிறது! பாதகர்களாய் இருந்தாலும்!

    ReplyDelete