Saturday 15 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (30)

சேதுபத்திரர்-
எழுந்தார்!

அவையோருக்கு -
வணக்கம் வைத்தார்!

பேச ஆரம்பித்தார்!

''அரபிக்கள்-
 நம் மண்ணை மிதித்ததிலிருந்து!

விடுவிக்கபட்டுக்கொண்டே செல்கிறார்கள்-
நம் சந்தேக சங்கிலியிலிருந்து!

அம்மக்கள்-
உயர் சாதியினரிடம் தலை சொறிந்து நிற்பதில்லை!

கீழ் சாதி மக்களிடமிருந்து தங்கள் முகத்தை திருப்பி கொள்வதும் இல்லை!

தேசத்திற்கு வந்த ஆபத்து , இந்த அரபிகள் என்றெண்ணிணோம்!

தேசத்தின் பல ரகசிய கதவுகளை அவர்கள் மூலமாகவே திறந்தோம்!

அன்றொரு நாள் மீனவ சமூக தலைவர்கள் என்னை சந்தித்தார்கள்!

தன் சமூக பெண்களை அரபிக்களுக்கு மணமுடித்து கொடுக்க அரச அனுமதி வேண்டி நின்றார்கள்!

''பெண்களிடம் தவறாக நடந்தார்களா!?
ஆதலால் இந்நிலைக்கு தள்ளபட்டீர்களா.!?
கேள்வி கேட்கப்பட்டது!

''தவறு'' அவர்கள் செய்திருந்தால் வெட்டி கடலில் வீசி இருப்போம்''- என பதிலாக வந்தது!

உண்மை புரிந்தது!

ஆதலால் மண விவகாரம் ஆலோசனைக்குள்ளானது!''

குரலொன்று குறுக்கிட்டது!

''அரபு நாட்டில் நம் பெண்கள் அடிமையாக விற்கப்பட்டால்..!?-
கேள்வியோடு நின்றது!

''விசாரித்தே மணம்முடித்து கொடுக்கப்படும்''-
சேதுபத்திரர் பதிலானது!

''ரகசிய விசாரணையா.!?
பகிரங்க விசாரணையா..!?-
மற்றொரு கேள்வி வந்தது!

சேதுபத்திரர் முகம் -
மன்னரை பார்த்தது!

மன்னரின் பதில்-
காதில் சொல்லப்பட்டது!

''பகிரங்கமாகவே விசாரிக்கபடும்''-என
பதிலாக ஒலித்தது!

மன்னர் பிரான் வாழ்க!
மன்னர் பிரான் வாழ்க!!
வாழ்த்தொலி எதிரொலித்தது!

மறுநாள்!
பிரமுகர்கள் ஒருபுறம்!
அரபிகள் மறுபுறம்!

நீதிபதியாக -
மன்னரை சுமந்திருந்தது-
அரியாசனம்!

கேள்வியெழுப்பினார்-
சேதுபத்திரர் அரபிகளை நோக்கி!

''உங்களில் திருமணம் முடிக்க விரும்புபவர்கள் எத்தனை பேர்கள்!?

அத்ஹம் -
அரபி மொழியில் கேட்டு சொன்னார்-
ஏழு பேர்கள்!

''இங்கு திருமண செய்திட விரும்புவதின் காரணங்கள்!.?

''அவர்களுக்குள் நேசம் வளர்ந்ததாலும்-இங்கு நீண்ட காலம் வியாபாரம் செய்திடவும்!-இவையே காரணங்கள்!''

''பெண்களை தேர்நதெடுத்து விட்டார்களா.!?

''மூவர் தேர்ந்தெடுத்து விட்டார்கள்-
மற்ற நால்வர் தேர்ந்தெடுக்க உள்ளார்கள்''!

''நீங்கள் இந்நாட்டின் சட்டங்களுக்கு கட்டுபட வேண்டும்!''

''சட்டங்களுக்கு கட்டுப்படுகிறோம்.திருமணம்.....!!-
இழுத்தார் அத்ஹம்!

(தொடரும்...!!)



3 comments:

  1. அத்ஹம் என்ன சொல்லப் போகிறார்...?

    ReplyDelete
  2. சுவையான வரலாறு! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  3. அடுத்து என்ன சொல்லப் போகிறார்கள்.... ம்ம்ம்ம்...

    ReplyDelete