Wednesday 12 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (27)

கிளம்பினார்கள்!
முக்கியமானவர்கள்!

நிலவு -
மேகத்தில் மறைந்து மறைந்து-
நீந்தியது!

நட்சத்திரங்கள்-
என்னவளின் சிரிப்பை-
நினைவூட்டியது!

ரகசிய இடத்தில்-
ராஜ குருவும்-
விஷ்ணுபட்டரும்-
கட்டபட்டுகிடந்தார்கள்!

மன்னருடன்-
சகாக்களை கண்டதும்-
உயிர் பயம் கொண்டார்கள்!

கைகட்டுகள்-
அவிழ்க்கபட்டன!

வைர வைடூரியம் கொண்ட-
சாக்கும் திறக்கப்பட்டன!

ராஜ குரு-
கேவலப்பட்டு நின்றார்!

உயிர்பிச்சை கேட்டு நின்றார்!

விஷ்ணுபட்டர்-
வெடவெடத்தார்!

ராஜ குரு-
முகத்திரையை இண்ணும் கிழித்தார்!

சேதுபத்திரரும்-
தளபதியாரும்-
''உத்தரவுக்காக'' காத்திருந்தார்கள்!

வெட்டி வீச-
தயாராக இருந்தார்கள்!

மன்னர் மனமோ-
இரக்க குணம்!

''அறுத்து எறிந்திட'' சொல்ல-
ஒப்பவில்லை மனம்!

அந்நேரம்!

எதிர்பார்க்காத தருணம்!

ரத்தத்தில் குளித்தார்-
மன்னர்!

ரத்தம்-
ராஜ குருவுடையது!

குத்திய கத்தி-
தளபதியாருடையது!

குத்திய கைகளோ-
விஷ்ணுபட்டருடைது!

ஏன் செய்தாரென-
தெரிவில்லை!

செஞ்ச பாவத்திற்கு-
பிராயச்சித்தமா!?

இல்லை-
செஞ்ச பாவத்தில்-
மேலுமொரு பாவமா!?

ராஜ குருவை குத்தியவர்!

தன்னைதானே-
குத்தி கொண்டார்!

விஷ்ணுபட்டரை-
தளபதியார் தடுத்துக்கொண்டிருந்தார்!

ராஜ குரு -
சரிந்துக்கொண்டிருந்தார்!

மன்னர்-
ராஜ குருவை தாங்கி பிடித்தார்!

தன் மடியில்-
கிடத்தினார்!

''அரசரே!
செய்த பாவத்திற்கு!

ரத்தத்தை சிந்தி விட்டேன்-
உங்களது பாதத்திற்கு!

துரோகம்-
 உங்களுக்கு இழைத்தேன்!

இழிவை நான் அடைந்தேன்!

இறந்த பின்-
என்னுடலை பூஜையறையில் வைத்திடுங்கள்!

விரதத்தில் ''மோட்சம்''அடைந்ததாக மக்களிடம் சொல்லிடுங்கள்!

இக்கோரிக்கை-
என்னை உயர்த்திக்கொள்ள அல்ல!

உங்கள் மேல் மக்கள் சந்தேகம் கொள்ளாதிருக்கன்றி வேறில்ல!''

ராஜ குரு-
சொல்லி முடித்தார்!

உயிர் துறந்தார்!

அத்ஹம் அழைக்கபட்டார்!

விஷ்ணுபட்டரை காப்பாற்ற-
அரபியொருவர் அனுப்பபட்டார்!

தண்ணீர் கொடுக்கப்பட்டது-
தளபதியாருக்கும்-
சேதுபத்திரருக்கும்-
ரத்தத்தை கழுவிட !

மன்னர்-
''முழுக்க'' நனைந்ததால்-
அழைத்து செல்லப்பட்டார்-
குளித்திட!

குளித்து வந்த மன்னர்!

ஆச்சரியமுடன் பார்க்க வைத்தார்!

அரபியர் ஆடை அணிந்திருந்தார்!

அரபியர்போலவே காட்சியளித்தார்!

மன்னர் -
முன்னே சென்றார்!

வைர ,வைடூரிய சாக்கை-
தூக்கி பின் தொடர்ந்தர்-
இருவர்!

ராஜ குரு உடலை கடத்த-
முற்பட்டனர்-
சிலர்!

அப்போது கேட்டார்-
சேதுபத்திரர்!

''மன்னரை முஸ்லீமாக்கி விட்டீரா...!?''

அத்ஹம்-
சேதுபத்திரரை பார்த்தார்!

(தொடரும்...!!)




5 comments:

  1. எந்தெந்த உயிருக்கு எத்தனை எத்தனை சதவீதம் அன்பு செலுத்த வேண்டும் ஒரு பட்டியல்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Love-Yourself.html

    ReplyDelete
  2. அத்ஹம் என்ன சொன்னார்?..தொடர்கிறேன்..

    ReplyDelete
  3. விறுவிறுப்பாக செல்கிறது! தொடர்கிறேன்!

    ReplyDelete
  4. தொடரும் விறுவிறுப்பு.... நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete