Sunday 9 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (24)

பதறியபடி-
தளபதியார் சென்றார்-
மன்னரை தேடி!

மன்னரை கண்டதும்-
காலை பிடித்து அழுதார்-
கதறியபடி!

மன்னர் தேற்றினார்!

அதிசயம்-
அங்கு நடந்தவற்றை-
மன்னரே சொன்னார்!

தளபதியார்-
வியந்துக்கொண்டே மௌனித்தார்!

மன்னர் தொடர்ந்தார்!

''ராஜ குருவை-
கண்ணியமாக வைத்தோம்!

கீழ்நிலைக்கு சென்றால்-
நாம் என்ன செய்வோம்!

நடந்தததும் சரி!
''நடந்திருப்பதும்'' சரி!

மன்னர் -
சாதாரணமாக சொன்னார்!

மீண்டும் சந்திக்க-
சேதுபத்திரருடன் வர சொன்னார்!

கூடினர்!
மன்னர்!
சேதுபத்திரர்!
தளபதியார்!

''இன்னொரு படையை தயார் செய்யுங்கள்!

சிங்கராயருக்கு பக்கபலமாக செல்லுங்கள்!

அதற்கு தலைமையாக தளபதியார் இருங்கள்!

உயிர் இழப்புகளை தவிர்க்க பாருங்கள்!

கூடுமான வரை கைது செய்யுங்கள்!

மார்த்தாண்ட வர்மனை உயிருடன் கொண்டு வாருங்கள்!''

உத்தரவிட்டார் -
மன்னர்!

புறப்பட்டார்-
தளபதியார்!

நாட்கள் சென்றது!

வெற்றி செய்தி எட்டியது!

தளபதியார்-
சொன்னார்!

''அரசே!
மார்த்தாண்ட வர்மரின் படையை-
சிறைப்பிடித்தோம்!

அதில்-
அவரது குடும்பமும் உள்ளடக்கம்!

ஆயினும்-
மார்த்தாண்ட வர்மருடன்-
முக்கிய ஆலோசகர்கள் -
தப்பியோட்டம்!''

கேட்டுக்கொண்டார்-
அரசர்!

தளபதியாரையும்-
சேதுபத்திரரையும்-
மறுநாள் வர சொன்னார்!

அரசரவையில்-
முக்கிய அமைச்சர்கள்-
கூடியிருக்க!

தளபதியாருடன்-
சேதுபத்திரரும் போய்-
பார்க்க!

அதிர்ச்சி!
அதிர்ச்சி!

அரியணையில் மன்னரும்!

அதனையொட்டிய இருக்கையில்-
மார்த்தாண்ட வர்மரும்!!

(தொடரும்....!!)






5 comments:

  1. ஒரு உரையில் இருகத்தியா...?!!!

    ReplyDelete
  2. எதிர்பாரா திருப்பம்! தொடர்கிறேன்!

    ReplyDelete
  3. அட இது என்ன.... இன்னுமொரு அதிர்ச்சியா.... தொடர்கிறேன்.

    ReplyDelete