Tuesday 22 October 2013

""நிசப்தம்"...!!

தூரத்தில் கேட்கும்-
நாய் ஊளையிடும்-
சப்தம்!

குழாயில்-
வடியும்-
தண்ணீரின்-
சப்தம்!

அடைபட்ட-
கோழிகள்-
சிறகடித்துகொள்ளும்-
சப்தம்!

காற்றில் -
நகரும்-
சருகுகளின்-
சப்தம்!

சாலையில் செல்லும்-
வாகனங்களின்-
சப்தம்!

வாகனத்தில்-
எழும்-
பாடல்களின்-
 சப்தம்!

நிசப்தமான-
இரவிலும்-
கேட்கிறது-
சப்தங்கள்!

அமைதியை விரும்பும்-
உள்ளத்திலும்-
அலைக்கழிக்கும்-
நினைவுகள்!

சில-
நாக்கில்-
சர்க்கரைபோல்-
இனிக்கிறது!

பல-
தொண்டையில்-
மீன் முள்ளாய்-
குத்துகிறது!


6 comments:

  1. இருக்கும் மனநிலையைப் பொறுத்ததே
    இனிப்பும் கசப்பும்...

    ReplyDelete
  2. நிசப்தம் - பல நேரங்களில் நம்மை படுத்துகிறது....

    நல்ல கவிதை சீனி. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அருமை... அவரவர் மனதைப் பொறுத்து மாறும்...

    ReplyDelete
  4. தூக்கம் வரா இரவின்
    அவஸ்தைகள் எனவும் சொல்லலாம்
    கவிஞர்களுக்கே உரிய கூரிய கவனிப்பு
    இதயம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இரவின் நிசப்தமும் இப்போது தொலைந்து விட்டது உண்மைதான்!

    ReplyDelete
  6. ம்ம் அருமை.....

    ReplyDelete