Sunday 22 September 2013

ஹஸ்ரத் மகலும்-பீபியம்மாளும்!

சுதந்திரம்-
எங்கள்-
பிறப்புரிமை!

அதை-
தடுக்க-
மற்றவர்களுக்கென்ன-
உரிமை!?

மற்ற நாடுகள்-
சுதந்திர தினம்-
கொண்டாட-
ஊக்கமளிப்பு!

நம் தேசத்திலோ-
தடை விதிப்பு!

சுதந்திரம்-
அடையத்தானே-
போராட்டம்!

அதனை-
கொண்டாடவுமா-
போராட்டம்!?

சுதந்திரத்தில்-
முஸ்லிம் பெண்களின்-
பங்கில்லையா!?

அதனை-
நீங்கள்-
அறியாத-
அறிவிலியா!?

அயோத்தியை-
ஆங்கிலேயன்-
கைப்பற்றினான்!

பிறகு-
கைசேதபட்டான்!

காரணம்-
எதிர்த்து-
போராடியது-
ஒரு பெண்மணி!

ஆம்-
ஹஸ்ரத் மகல்-எனும்
கண்மணி!

ஒன்பது மத-
போராட்டத்திற்கு பின்-
தானும்-
தன் மகனும்-
கொல்லபட்டார்கள்!

சுதந்திரத்திற்காக-
புதைந்தார்கள்!

இதுதான்-
எங்கள்-
வரலாறு!

சுதந்திரதினம்-
கொண்டாட-
மறுக்க-
நீங்க யாரு!?

என் தோளில்-
இரு புலிகள்-என
காந்தி சொன்னார்கள்!

அப்புலிகள்தான்-
அலி சகோதரர்கள்!

கிலாபத் இயக்கம்-
வைத்து-
சுதந்திரத்திற்காக-
களமாடியவர்கள்!

மகன்களை-
மிஞ்சிய தியாகம்-
கொண்டவர்-
தாயார் பீபியம்மாள்-
அவர்கள்!

ஆங்கிலேயனிடம் கைதான -
என் மகன்கள்-
மன்னிப்பு கேட்கமாட்டார்கள்!

அப்படி -
கேட்டால்-
என் கையாலேயே-
கழுத்து நெரித்து-
கொல்லபடுவார்கள்!

இதுதான்-
அந்த தாயின்-
வீராவேசம்!

அதுதானே-
வீர வம்சம்!

ஓ!
நாட்டுக்காக-
உயிர்நீத்த-
தியாகிகளே!

ஒரு நாள்-
நனவாகும்-
உங்கள் கனவுகளே!

3 comments:

  1. வணக்கம்
    அனுசூயா

    கவிதை அருமை வரிகளும் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வீரமிகு வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அருமை! வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete