Wednesday 4 September 2013

வண்ணத்து பூச்சிகள் எத்தனையோ...!?

வண்ணங்கள் -
கலையபடுது!

மெல்லிய உடலில்-
அமிலங்கள் ஊற்றபடுது!

சிறகுகள்-
பிச்சி எறியபடுது!

தெருவில் யாரும் -
தட்டி கேட்க முடியாது!

எதிர்த்து கேட்டால்-
அவ்வண்ணத்து பூச்சியே-
அவமானத்திற்கு உள்ளாக்கப்படும்!

அமிலத்தினால் "பட்ட-"
 காயத்தில்-
நெருப்பு குச்சியால்-
சுடப்படும்!


இது போன்ற-
வண்ணத்து பூச்சிகள்-
எத்தனையோ!?

வரதட்சணை-
கேவலத்தால்-
கொடூரர்களை-
கரம்பிடித்த-
சகோதரிகள்-
எத்தனையோ...!?

2 comments: