Tuesday 27 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமு!(53)

நபிகளாரை பற்றி-
சுற்றுவட்டாரங்களில்-
அறிமுகம் -
இருந்தது !

அறிந்திருந்த-
மக்களிடமோ-
ஏக்கம் இருந்தது!

"உண்மையாளர்களாக " இருந்தால் -
ஏன் மக்காவை விட்டு-
வெளியேற்றபட்டார்கள்!?

பிற மக்களிடம் இருந்தது-
இப்படியான சந்தேகங்கள்!

இதுபோன்ற-
கருத்துடைய மக்கள்!

மக்காவின் வெற்றிக்கு பின்-
தெளிவடைந்தார்கள்!

அதன் பிறகோ-
கூட்டம் கூட்டமாக-
இஸ்லாத்தில் இணைந்தார்கள்!

அதில் -
சில குழுக்களின்-
பெயர்கள்!

அப்துல் கைஸ் குழுவினர்!
தவ்ஸ் குழுவினர்!
சுதா  குழுவினர்!

இப்படியாக-
எத்தனையோ-
குழுவினர்கள்!

நீளம் கருதியே-
குறைக்கபட்டார்கள்!

அரசர்களுக்கு-
நபிகளார்-
இஸ்லாமிய அழைப்பை-
கடிதம் மூலம்-
அழைத்திருந்தார்கள்!

அதற்கு-
யமன் நாட்டினர்கள்-
இஸ்லாத்தை ஏற்றதாக-
பதில் கடிதம்-
அனுப்பினார்கள்!

எங்கும்-
ஒரே சப்தம்!

ஒரே இறைவன்-
இறைதூதர் முஹம்மது (ஸல்)-எனும்
முழக்கம்!

நபிகளாரின்-
ஓயாத உழைப்பு!

எண்ணிலடங்கா -
அர்பணிப்பு!

நபிகளின் -
வழிகாட்டுதலில் நடந்ததால்-
எத்திசையிலும்-
ஆர்பரிப்பு!

இன்றோ-
உலகமெல்லாம்-
வியாபித்து இருப்பு!

முஹம்மது (ஸல்)-அவர்களை
இறைதூதர் என்கிறீர்கள்!?

ஏன்-
இப்படியெல்லாம்-
கஷ்டபட்டார்கள் !?

சந்தேகங்கள் வரும்!

அதற்கான பதில்-
இனி வரும்!

(தொடரும்....)




No comments:

Post a Comment