Friday 23 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(47)

தொடர்ந்த -
போர்களால்!

முஸ்லிம்களின்-
தற்காப்புகளால்!

வாலை சுருட்டிகொண்டது-
எதிரணி!

வலிகளையும்-
உயிர் தியாகிகளையும்-
சந்தித்தே இருந்தது-
முஸ்லிம்கள் அணி!

நாட்கள் -
கடந்தது!

மாதங்கள்-
ஆனது!

நபிகளாருக்கு-
உம்ரா (புனித யாத்திரை) செல்ல-
மனம் விரும்பியது!

முஸ்லிம்கள் செயல்கள்-
 பயணத்திற்கு -
ஆயத்தமானது!

மக்காவாசிகள்-
உம்ராவிற்காக-
நபியும் தோழர்களும்-
மக்கா வருவதை-
அறிந்தார்கள்!

தடுக்க முனைந்தார்கள்!

பேச்சுவார்த்தையின்-
நடுவராக "புதைல்"-என்பவர்
வந்தார்!

கருத்துகளை பரிமாறினார்!

இறுதி நடுவராக-
சுஹைல் என்பவர்-
வந்தார்!

ஒப்பந்த வாசங்களை-
சொன்னார்!

அவ்வொப்பந்தம்-
முஸ்லிம்களுக்கு-
பாதகமானது!

நிராகரிப்போருக்கு-
சாதகமானது!

நபிகளாருக்கு-
சம்மதம்!

நபியின் தோழர்களுக்கோ-
மன வருத்தம்!

ஆனாலும்-
தலைமைக்கு கட்டுப்பட்டது-
தோழர்களின்-
உணர்வுகளும்!

உம்ரா செய்திட-
மக்காவிலுள்ள-
காபதுல்லாவிற்கு-
நபிகளார் செல்ல முடியவில்லை!

உம்ராவின் கடமைகளை-
இருந்த இடத்தில-
செய்திடாமல்-
திரும்பவில்லை!

இவ்வொப்பந்தம்-
முஸ்லிம்களுக்கு-
எதிராகவே -
இருந்தது!

அதுவே-
மிகப்பெரும் வெற்றிக்கு-
வழியானது!

(தொடரும்.....)








1 comment:

  1. மிகப்பெரும் வெற்றிக்கு வழியானது...

    தொடர்கிறேன்...

    ReplyDelete