Monday 8 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(5)

மக்கள்-
மாசுகொண்ட-
மனங்களால்-
மல்லாந்தபோது!

பாவகடலில்-
மூழ்கியபோது!

படைத்தவன்-
அதிசீக்கிரத்தில்-
பழிவாங்கவில்லை!

நல்வழி-எனும்
நேர்வழியை-
சொல்லாமலில்லை!

ஒவ்வொரு -
சமூகத்திற்கும்-
தன் தூதரை(நபி)-
அனுப்பினான்!

அத்தூதரை-
மனிதர்களிருந்தே-
தேர்ந்தெடுத்தான்!

கேட்கத்தான்-
பெரும்பாலானவர்களுக்கு-
மனமில்லை!

இம்மக்களை-
இறைவனும்-
தண்டிக்காமலில்லை!

நபி நூஹ் (அலை)-
மக்களை-
நல் வழிக்கு-
அழைத்தார்கள்!

செவி சாய்த்தது-
மிக சொற்பமானவர்கள்!

வரம்பு மீறிக்கொண்டே-
போனார்கள்!

இறுதியில்-
பெரும்கொண்ட-
வெள்ள பிரளயத்தில்-
அழிந்தார்கள்!

நல் வழி சென்ற-
நம்பிக்கையாளர்கள்-
கப்பலில் காப்பாற்றபட்டார்கள்!

நபி லூத் (அலை)-
சமூகம்!

ஓரின சேர்கையாளர்களாகும்!

தப்பு -என
சொல்லிபார்த்தார்கள்!

தடுத்தும்பார்தார்கள்!

மக்கள்-
கேட்டார்கள்!?

தண்டனை சொல்ல-
வந்த -
வானவர்கள்!

அவர்களையும்-
"தப்பான "-
காரியத்திற்கு-
அழைக்கவந்தார்கள்!

லூத் நபி (அலை)-
அவர்களும்-
நல்வழி வந்தவர்களும்-
காப்பாற்றபட்டார்கள்!

அநியாயக்காரர்கள்-
கல்மழையில்-
செத்தழிந்தார்கள்!

இறைவன்!
அன்பாளன்!
அருளாளன்!

ஆனால்-
மனிதன்!?

ஆயிரக்கணக்கில்-
போடலாம்-
கேள்விக்குறிகள்!

இன்றைக்கும்-
உலகில் நடக்கும்-
அனாச்சாரங்கள்!?

(தொடரும்....)







2 comments: