Sunday 30 June 2013

சூடுபட்டவன்...!

என்னை-
சுட்டு விட்டு-
மகிழ்கிறது-
சுடு எண்ணெய்!

எத்தனையோ-
சுடும்வார்தைகள்-
சுட்டிவிட்டது-
என்னை!

எண்ணெய்-
சுட்டது-
சொல்லாமலே-
தழும்பில்-
தெரியும்!

என் மனதின்-
தழும்புகள்-
மனிதர்களில்-
யார்-
அறியக்கூடும்!

பட்டிடும்-
எண்ணெய்-
அறியாது!

நான்-
அதை விட-
"சூடுபட்டவன்-"
என்பது!

பாவம்-
எண்ணெய்தான்!

அதற்கு-
மகிழ்வென்றால்-
சுடட்டும்-
என்னைதான் !




4 comments:

  1. ம்ம்ம்... நல்ல கவிதை சீனி.

    ReplyDelete
  2. எதையும் தாங்குவோம்...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
  4. சூடுபட்டவர்களுக்குத்தான் இந்தக் கவிதையின்
    ஆழமான பொருள் மிகச் சரியாகப் புரியும்
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete