Monday 10 June 2013

தேடலுடன்...தேனீ..!!(4)

மீசை முளைப்பதால்-
ஆசை வருதா!?

இல்லை-
ஆசை வருவதால்-
மீசை முளைக்குதா!?

கேள்வி வரலாம்-
இப்படி!?

ஆனால்-
பதில் முடிவதுதான்-
எப்படி!?

நம்ம-
கதாநாயகரு!

மீசை-
"ஒதுக்கத்தான்-"
போவாரு!

ஆனால்-
அப்போது-
அவரே-
நொருங்கிடுவாரு!

மன சஞ்சலத்தால்-
"சன்ன சன்னமாக"-
சரிஞ்சிடுவாரு!

காதல்-
பித்து!

இவரை-
வேடிக்கை பார்க்கும்-
ஆட்டுவித்து!

பருவகாலம்-
பறிபோகும்-
மனம்!

காலமெல்லாம்-
நினைவால்-
ரணம்!

அவள்-
நினைப்பே-
இவருக்கு!

இவர்-
நினைப்பாகதான்-
அவளுக்கும்-
இருக்கு!

சமூகத்திலிருக்கும்-
தீண்டாமை!

"சாக்கு போக்காக"-
பேச்சில் வைக்கும்-
வன்மை!

குளிகாய வைக்கும்-
நெருப்புகள்!

"சொல்ல-"
நினைத்தும்-
முடியாத-
தருணங்கள்!

இவைகள் -
தீயாக-
சுடுபவைகள்!

இக்காதலின்-
"முடிவோ-"
படித்து-
ரசிக்கவேண்டியவைகள் !

இப்பாகம்!

கிராமத்து-
காதலின்-
வலியை சொல்ல்வதோ-
எதார்த்தம்!

(தொடரும்...)

4 comments:

  1. பித்து நன்றாக ஆட்டுவிக்கிறது...

    ReplyDelete
  2. காதல் வந்துவிட்டதா கதையில்.... தொடருங்கள்..... நானும் தொடர்கிறேன் எதிர்பார்ப்புகளோடு!

    ReplyDelete
  3. கிராமத்து-
    காதலின்-
    வலியை சொல்ல்வதோ-
    எதார்த்தம்!/

    /கவிதையும் கருவும்
    சொல்லிச் சொல்லும் அழகும் கூட....
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கிராமத்து காதல் வலி சொல்லுங்கள் சொல்லுங்கள்.

    ReplyDelete