Friday 21 June 2013

தேடலுடன்...தேனீ....!! (15)

சிறைபட்ட-
மால்கமிற்கு!

எதிர்பார்ப்பார்-
ஆதரவிற்கு!

தன் சகோதரி-
வரவிற்கு!

"வெளியில்"-
நடப்பவற்றை-
சொல்வாள்-
வந்ததற்கு!

சொன்னாள்-
தற்போது-
நடப்பதாக!

கறுப்பின மக்கள்-
"மாற்றமடைவதாக!"

எலிஜா முகம்மதுவின்-
இயக்கம்-
காரணம் என்றாக!

மால்கமும்-
நினைத்தார்-
திருந்திடனும்-
என்பதாக!

சிறை சென்றவர்!

சிறை நூலகத்தில்-
அடைபட்டார்!

புத்தகத்தில்-
நேரம் கழிந்தது!

புதியவற்றை-
அறிவு தேடியது!

காலம்-
கரைந்தது!

கனிந்தது!

வெளி வரும்-
நாளும் -
வந்தது!

ஏற்று கொண்டார்-
இஸ்லாத்தை-
வாழ்கை நெறியாக!

மால்கம்-
ஆனார்-
"மாலிக் ஷாபாஷ் "-ஆக!

ஆனாலும்-
மால்கம் x -
என்பதே-
ஆனது-
நிரந்தரமாக!

ஆயத்தம்-
ஆனார்-
மறக்கப்பட்ட-
மறைக்கப்பட்ட-
வரலாற்றை-
சொல்வோராக!

கடந்த காலம்-
சூறாவளியில்-
சிக்குண்ட -
வாழ்கை!

இனி வரும்-
காலம்-
பிரசார சூறாவளியான-
வாழ்கை!

எப்படியும்-
வாழலாம்-
என்பவரை-
"சும்மா விட்டிடும்"-
உலகம்!

இப்படிதான்-
வாழனும்-
என்பவரை-
"சும்மா விடுமா"!?-
உலகம்!

(தொடரும்..)






3 comments:

  1. விடாது...

    தொடர்கிறேன் ஆவலுடன்...

    ReplyDelete

  2. வணக்கம்!

    சிந்தனை ஓட்டம் செழிபுடன் உள்ளதெனத்
    தந்தேன் கருத்தைத் தழைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete