Wednesday 15 May 2013

பெண்ணினம்...! (19)

பிரபலங்கள்-
வீடு முற்றுகை-என
சொல்லப்பட்டது!

காரணம்-
பாலியல் தொந்தரவு-என
கேள்வி பட்டது!

சரி -
நல்லது!

குற்றம் சாட்டிய-
அதே நடிகை!

பிறந்த நாளின்போது-
கொடுத்தால்-
ஒருவருக்கு-
முத்தத்தை!

அவர்-
யார் !?-
குற்றம் சுமந்தவரின்-
உறவினர்!

அவரும்-
ஒரு -
நடிகர்!

வழியை-
இவர்களே-
காட்டுவார்களாம்!!

ஆனால்-
"வாராதே"-
என்பார்களாம்!!

நாமெல்லாம்-
அதனாலென்னப்பா!?-
அவர்கள் சுதந்திரம்-
என்போமானால்!

ஒத்துகொள்கிறேன்-
பின் வருபவைகளையும்-
சரி என்போமானால்!

"காற்று வரட்டும்"-
என்றவர்-
"கதவை சாத்தியதை"-
சரி என்று-
சொல்வோமானால்!

நெடுஞ்சாலையில்-
நடுவில்-
ஒருவன்-
சிறு நீர் கழித்து கொண்டு-
வாகனத்தை ஒதுங்க-
சொல்வானேயானால்!

அதனை-
நாம்-
சரி என்போமானால்!

கீழ்வீட்டுகாரன்-
அஸ்திவாரத்தை-
இடிப்பதை-
மேல் வீட்டுக்காரன்-
தடுக்காமல்-
இருப்பானேயானால்!

அதை-
நாம் அறிவுடைமை-
என
சொல்வோமானால்!

அதுபோல்தானே-
சமூக கட்டமைப்பு!

உரிமை-என்பது
சமூகத்தை-
செய்யுமானால்-
அலைக்கழிப்பு!?

தனி மனித-
சுதந்திரம்-
முக்கியம்!

அச்சுதந்திரம்-
சமூகத்தை-
சீர் குலைக்காமல்-
இருப்பது-
மிக முக்கியம்!

(தொடரும்....)


3 comments:

  1. முக்கியமான கருத்தை அருமையாக சொன்னீர்கள்...

    ReplyDelete
  2. அத்தனையையும் கண்டும் காணாமல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்...

    ReplyDelete
  3. கடைசி நான்கு வரிகள் அற்புதம்! அருமையாக சொன்னீர்கள்! தொடர்கிறேன்!

    ReplyDelete