Tuesday 9 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(5)

தலைப்பு செய்தியாக-
தலை தெறிக்க-
சொன்னது!

முக்கிய செய்தியாக-
"முக்கி கொண்டு"-
சொன்னது!

மோடியை-
கொல்ல தீவிரவாதிகள்-
வந்ததாக!

"அவர்கள்"-
தற்காப்பு தாக்குதலில்-(என்கவுண்டர்)
மாண்டதாக!

அதில்-
ஒரு பெண்ணும்-
அடக்கம்!

அத்தனைபேரும்-
செய்யபட்டார்கள்-
"அடக்கம்"!

இருந்தது-
சாமானிய மக்களிடமும்-
முனக்கங்களாக!

சமூக ஆர்வலர்களிடம்-
மேடை முழக்கங்களாக!

அது-
பின்வருபவனாக!

நாதியற்று-
"நரபலி" நடக்கையில்-
வராதவர்கள்!!

தாகத்தில் வந்த-
குழந்தைவாயில்-
பெட்ரோலை ஊற்றி- எரிக்கும்போது-
வராதவர்கள்!!

மோடிக்கு -
எதிரான குரல் எழும்பும்போது-
ஏன் வருகிறார்கள்!?

இதன்பிறகு-
கட்சியினரின்-
மோடியை-
"கதானாயகனாக்கினார்கள்"!

நாட்கள் -
ஆண்டுகளானது!

ஓர்-
உண்மை வெளியில்-
வந்தது!

"அத்தீவிரவாதிகள்"(!!!!)-
அப்பாவிகள்!

வேலைக்காக-
குஜராத் வந்தவர்கள்!

நீதிமன்றம்-
"போலிதாக்குதல்-"என
தீர்ப்பு வழங்கியது!

காவல்துறையினர்-
குற்றவாளிகளாக-
கைதுகள்-
நடக்கிறது!

இவ்வுண்மையை-
எத்தனை பேர்-
நம்மில் அறிந்தது!!?

(தொடரும்....)

//தற்காப்புதாக்குதல்  சம்பவம் நடந்தது- ஜூன் 15 2004.
போலிதாக்குதலில் இறந்தவர்கள்-
இஸ்ரத் ஜகான் (பெண் ) . ஜாவித் ஷேக்.அம்சத் அலி ரானா.சீசான் ஜோஹர்.

குற்றவாளிகாளாக சேர்க்கப்பட்ட காவல்துறையினர்கள்!
அப்போதைய உதவி கமிஷனர் ஜி.எல்.சிங்கால்,டி.ஜி.பி வன்சாரா ,தற்போதைய கூடுதல் டி.ஜி.பி .பி.பி. பாண்டே ஆகியோர்கள்.
 பிப் 21 சி பி ஐ யால் சிங்கால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்சாரா சொஹ்ராபுதீன் போலி தாக்குதலில் சிறையில்தான் உள்ளார்.//

1 comment: