Friday 19 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(14)

என்னது..!?-
நாடு-
முன்னேறுமா..!?

வறுமை-
ஒழியுமா!?

நல்லாட்சி-
நடக்குமா..!?

இதெல்லாம்-
நடக்கிற-
காரியமா!?

என்றெல்லாம்-
மனதோடு-
போராட்டமா!?

இன்றைக்கு-
இரு நாடுகளை பற்றி-
பார்ப்போமா!?

நூறு சதவிகிதம்-
கல்வியறிவு-
பெற்ற நாடு!

முதல் வகுப்பு முதல்-
பல்கலைகழகம் வரை-
இலவசாமாக-
பயிற்றுவிக்கும் நாடு!

வீடில்லாதவர்களை-
வீடு கட்டி-
வாழவைக்கும்-
நாடு!

அது-
வெனிசுலா எனும்-
நாடு!

மற்றொரு-
நாடு-
இங்கு சாதாரண-
குடும்பத்தில் பிறந்தவர்!

அதிபரான -
பிறகு-
உலகவங்கி கடன்களை-
அடைத்தவர்!

ஐரோப்பிய நாடுகளில்-
தவிர்க முடியாத சக்தியாக-
உருவெடுப்பவர்!

"அது செய்வேன்"-
"இது செய்வேன்"-என
பிரச்சாரம் செய்யாதவர்!

இன்னும் -
மேன்படுத்துவேன்-என
தேர்தலை சந்தித்தவர்!

அவர்தான்-
துருக்கி அதிபர்-
எர்துகான் ஆவார்!

இந்நாடுகளில்-
நடப்பது!

நடந்தது-
மாற்றமில்லையா!?

நம் நாடு-
மாறாது-என்று
சொன்னால்-
அது நம்மையே-
 ஏமாற்றுவது-
இல்லையா!?

வரும்-
நாடாளு மன்றதேர்தலில்-
சிந்தித்து வாக்களித்தால்-
பாவமில்லை இல்லையா!?

(முற்றும்)

//வெனிசுலா தகவல் படித்தது-
சிந்திக்கவும் வலை தளத்திற்கு மிக்க நன்றி!
அதன் இணைப்பு...!
http://www.sinthikkavum.net/2013/04/blog-post_6455.html?m=1////




5 comments:

  1. நம் நாடு-
    மாறாது-என்று
    சொன்னால்-
    அது நம்மையே-
    ஏமாற்றுவது-
    இல்லையா!?

    சிந்தித்தால் சிறப்பு.

    ReplyDelete
  2. மாற்றங்கள் ஏற்படட்டும்.....

    நல்ல கவிதைத் தொடர்.... பாராட்டுகள் சீனி.

    ReplyDelete
  3. அருமையான தொடர்! அழகாய் நிறைவு செய்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நம் நாடு-
    மாறாது-என்று
    சொன்னால்-
    அது நம்மையே-
    ஏமாற்றுவது-
    இல்லையா!?

    வரும்-
    நாடாளு மன்றதேர்தலில்-
    சிந்தித்து வாக்களித்தால்-
    பாவமில்லை இல்லையா!?

    மாற்றம் ஒன்றே மாறாதது ..

    ReplyDelete

  5. வணக்கம்!

    உலகின் நிலையை உணா்த்தும் வரிகள்
    உளத்துள் பதித்தால் உயா்வு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete