Sunday 10 February 2013

ஹபீப்-குர்சியத் (12)

கல்யாணம்-
இன்றைக்கு -
பெரும்-
விவாதம்!

"கட்டிக்கொண்டு-"
பெத்துக்கலாமா!?
பெத்துவிட்டு-
கட்டிக்கலாமா!?-
என்றெல்லாம்!

மெத்த படித்தவர்கள்-
மெத்தனமா-
சொல்றாங்க-
மனம் ஒத்தால் -
வாழலாமாம்!

இவங்க -
தேக இச்சை -
முடிந்ததும்-
பிரிந்தால்-
பிள்ளைங்க யாரை-
அப்பன் என்று-
சொல்லுவாங்களாம்!?

படிக்காத-
பாமரர்கள்தான்-
எங்கள் -
பெற்றோர்கள்!

பருவத்தில்-
வழிதவறிடகூடாதுன்னு-
திருமணத்தில்-
இணைக்கிறார்கள்!

பண்பாடு இல்லாமல்-
பட்டங்களை மட்டும்-
தரும்-
படிப்புகள்!

பண்பாடு மிக்க-
பாமரர்களின்-
காலடி செருப்புகள்!

ஹபீபின்-
திருமண நாளும்-
வந்தது!

ஊரும்-
உறவும்-
நட்பும்-
சூழ்ந்தது!

இனிதே-
திருமண ஒப்பந்தம்-
நடந்தேறியது!

இரண்டொரு நாட்கள்-
கழித்து-
மண மக்களை-
சந்தித்தேன்!

படிக்கும் காலத்தில்-
பார்த்த பிறகு-
அன்றுதான்-
பார்த்தேன்!

"என்னண்ணே!?-
நல்லா இருக்கியளா!?-என
கேட்டார்-
குர்சியத் சகோதரி!

என்னிடம் அதிகம்-
உச்சரித்த வார்த்தை-
அதே வரி!

திருமணம்!

வாழ்வின்-
முக்கியமான -
அங்கம்..!

(நினைவுகள் சுழலும்...)



2 comments:

  1. திருமணம்!

    வாழ்வின்-
    முக்கியமான -
    அங்கம்..!
    >>
    கரெக்ட்தான் சகோ! பலருக்கு நல்லவிதமாகவும், சிலருக்கு கெட்ட விதமாகவும் அமைந்து விடுவது தான் கொடுமை

    ReplyDelete
    Replies
    1. raaji sako..!

      umgal varavukkum karuthirkkum
      mikka nantri!

      Delete