Wednesday 5 December 2012

வெளிச்சங்கள்"! (9)

"இருந்ததை"-
இடித்தார்கள்!

"இல்லாததை-"
இருக்குது-
என்கிறார்கள்!

அரசே-
கமிசன்கள்-
அமைத்தார்கள்'

உலக சாதனைக்கு-
பதியலாம்-
அத்தனை-
தவணை -
நீட்டிப்புகள்!

அக்கமிசன்-
சொன்ன-
முக்கிய -
குற்றவாளிகள் மேல்-
பாய மறுக்குது-
வழக்குகள்!

அப்போ-
எதற்கு-
நடத்திட-
உத்தவு-
பிறப்பிக்கணும்-
கமிசன்கள்!

தெரியாமல்-
நடந்தால்-
விபத்தினால்-
மரணம்!

அனைவரும்-
பார்க்க-
நடந்ததுவோ-
அக்கிரம-
கொலைவெறியாகும்!

எல்லோரும்-
பார்க்க!

அரசுகளும்-
மௌனிக்க!

பாதுகாப்பு-
படைகளும்-
கண்ணை-
மூடி கொண்டிருக்க!

நடந்து-
முடிந்தது-
அச்சம்பவம்!

குத்தி-
கிழித்து-
தொங்கி கொண்டிருக்கிறது-
மதசார்பற்ற நாடு-என்ற
சொல்லாகும்!

உலகே-
தேசத்தை-
அகிம்சை-
பூமி-
என்றது!

இல்லை-
இனி-
அடாவடி பூமி-என
இச்செயல்-
சொல்லி சென்றது!

"மாட்டிறைச்சி -
சாப்பிடுவதை-
நிறுத்தி விடு-
இம்மக்கள் -
மாடுகளை-
புனிதமாக-
கருதுகிறார்கள்-என
தனயன்-
ஹுமாயுனுக்கு-
அறிவுறுத்திய-
பாபரே!

புனிதமாக-
மதிப்பதை கூட-
தவிர்க்க சொன்ன-
நீயா!!

அம்மக்கள்-
உயிராக
மதிக்க கூடிய-
வழிபாட்டு தளத்தை-
இடித்திருப்பாயா!?

அதில்-
வேறொரு -
வழிபாட்டு தளத்தை-
எழுப்பிருப்பாயா!!?

சந்தேகம்-
இல்லாமலில்லை!

உண்மை-
உறங்கியே-
கிடைப்பதில்லை!

விழுந்த-
கடப்பாரை-
இறை இல்லத்தில்-
மட்டும்-
இல்லை!

இறையாண்மையின்-
இதயத்திலும்-
விழுந்த இடி-என்பதை
மறுப்பதற்கில்லை!

(குமுறல்கள் தொடரும்....)



7 comments:

  1. பகுத்தறிவு என்ற வெளிச்சம் முழுமையாக பரவவில்லை என்ற சான்றின் துகள்கள்..... அருமை தோழரே...

    ReplyDelete
  2. இறையாண்மையின்-
    இதயத்திலும்-
    விழுந்த இடி-என்பதை
    மறுப்பதற்கில்லை!

    முற்றிலும் உண்மைங்க.

    ReplyDelete
  3. இறையாண்மையில் இதயத்தில் விழுந்த இடி! அருமையான வரிகள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. இதை செய்ய அவர்கள் சுமார் 80 ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளார்கள். இவர்கள் பாபர் மசூதியோடு மட்டும் தங்கள் திட்டத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. பாபர் மசூதி தொடங்கி இந்தியா முழுவதும் 3600 க்கும் அதிகமான மசூதிகளை உரிமை கொண்டாடுகிறார்கள்.

    ReplyDelete
  5. IF YOU NEEND MORE INFORMATION PLEASE GO TO VISIT WWW.SINTHIKKAVUM.NET

    YOU CAN READ MALARVILI ARTICLE ON THERE.

    ReplyDelete