Thursday 27 December 2012

முகலாயர்களே....(19)

தேனடையை-
சுவைக்கும்-
நாம்!

தேனீக்களின் -
உழைப்பை-
அறிந்தோமா!?

நதிகளை-
ரசிக்கும்-
நாம்!

அது-
கடந்து வந்த-
கரடுமுரடுகளை-
அறிந்தோமா!?

கவிதை-
வாசிக்கும்-
நாம்!

சிந்தனைகள்-
பிரசவிக்கும்-
வலிகளை-
உணர்ந்தோமா!?

கலை-
நயத்தில்-
லயிக்கும்-
நாம்!

லயிக்கும்போது-
நைந்த விரல்களை-
அறிவோமா!?

சொகுசான-
பயணங்கள்-
மேற்கொள்ளும்-
நாம்!

சாலையில்-
புதையுண்டிருக்கும்-
சரளை கற்களை-
அறிவோமா!?

பச்சிளம்-
குழந்தையை-
உச்சி முகர்ந்து-
முத்தமிடும்-
நாம்!

பேறுகாலத்தின்போது-
மரணத்தின் எல்லையை-
தொட்டு திரும்பும்-
தாய்மையை-
உணர்வோமா!?

புரட்சி-
புத்தகங்களை-
புரட்டி-
படிக்கும்-
நாம்!

அப்புரட்சியின்போது-
புரண்ட-
சில தளபதிகளை-
இன்று-
பார்ப்போமா!?

செங்குருதி-
சிந்தி-
செங்கோட்டையை-
காத்தவர்கள்!

ஆங்கிலேய-
படையை-
ஆட்டங்கான-
செய்தவர்கள்!

பக்த்கான்-
மௌலவி சர்ப்ராஜ் அலி-
போன்றவர்கள்!

இறக்கும்வரை-
போராடுவோம்!-என்று
சபதம்-
ஏற்றவர்கள்!

அச்சபதத்தை-
அடைந்தவர்கள்!

இரண்டாயிரம்-
போராளிகளுடன்-
இணைந்து-
போராட்டகளம்-
கண்டவர்கள்!

இத்தாத் அலிகான்-
மௌலவி நவ்ஜிஸ் அலி-
போன்றவர்கள்!

சதைகளும்-
ரத்த நாளங்களும்-
கொண்டது-
நம் உடலாகும்!

அந்த -
உடலை-
 கேடயமாக வைத்து -அடைந்ததே-
நம் சுதந்திரமாகும்!

சுதந்திரம்-
ஒவ்வொருவரின்-
பிறப்புரிமை!

அதனை-
பறிக்க-
யாருக்கும்-
இல்லை-
உரிமை...!!

(தொடரும்....)


4 comments:

  1. பெரியதொரு வரலாற்றை அழகாக தருகிறீர்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  2. சுதந்திரம்-
    ஒவ்வொருவரின்-
    பிறப்புரிமை!

    ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. raajesvari!

      thodarnthu varum-
      anpirkku mikka nantri

      Delete