Monday 30 July 2012

யார் பிணங்கள்....!?



கும்பகோணத்தில்-
கொடூர சம்பவம்-
நடந்தேறியது!

ஒரு "பூவின்" மீது-
பேருந்து-
ஏறி இறங்கியது!

"தீர்ப்பு" சொன்னதுக்கு-
கல்லூரி மாணவிகள்-
எரிப்பு!

"கருத்து கணிப்பு"-
வெளியிட்டதுக்கு-
ஊழியர்களோட-
எரிப்பு!

இத்தகைய தொண்டர்கள்-
கொண்ட கட்சிகள் -
மாறி மாறி ஆளும்-
அரசியல் நடப்பு!

"ரத்த யாத்திரை"-
புகழ்!

"ரத்த காட்டேரி"-
புகழ்!

"இதுகளுக்கு"-
நாட்டை ஆளும்-
ஆசைகள்!

கணிக்கலாம்-
இவ்வாறு-
யாரால் நடந்தது-
அதிக கொலைகள்!

அவருக்கே கொடுக்கலாம்-
"சீட்டுகள்"!

யாரோ செய்த பாவத்திற்கு-
யாரையோ கொல்லும்-
பாவிகள்!

ஆயிரக்கணக்கில்-
கொலைகள் "பார்த்தும்"-
பதவி ஆசைகொண்ட-
படுபாவிகள்!

எத்தனை-
போலி தாக்குதல்கள்!

உயிர் போன பிறகே-
விசாரணைகள்!

இருந்தது-
முள்ளி வாய்க்காலாய்!

மாறியது-
கொலைகளின் கால்வாயாய்!

காஷ்மீரத்து மக்கள்-
காட்டு மிராண்டி-
அடக்குமுறைகள்!

ஆண் பெண்-
நட்பை பயன்படுத்தி-
"நாசம்"செய்யும்-
நாய்கள்!

பெண்களின் அங்கங்களை-
படம் பிடித்து-
பகிர்ந்து கொள்ளும்-
கொடூரர்கள்!

உலகில் -
பசி தெரியாமல் -
சில நூறு பேர்கள்!

உணவே -
தெரியாதவர்களோ-
பல கோடிகள்!

அகிலத்தில்-
அறிவியல் வளர்ச்சிக்கு-
பஞ்சமில்லை!

அன்புக்குத்தான்-
இடமில்லை!

அணு குண்டுகளுக்கோ-
குறைவில்லை!

இத்தனையவும் பார்த்து -
உணர்வற்று இருப்பவர்கள்-
உயிருள்ளவர்களா!?

உணர்ச்சியற்று-
உணர்வற்று கிடக்கும்-
நாங்கள் பிணங்களா!?

இப்படியெல்லாம்-
கேட்பவர்கள்!

மயான காட்டில்-
அநியாயமாக கொல்லப்பட்டு-
"அடக்கப்பட்டவர்கள்!"



Sunday 29 July 2012

யார் கொடுப்பது...!?



இருக்கும் ஒரு மிடறு-
தண்ணீரை அடுத்தவருக்கும்-
பகிர்ந்து அருந்துபவனுக்கு!

நதி நீரை-
கடலில் விட்டாலும்-
அண்டை மாநிலத்துக்கு-
கொடுக்க மறுக்கும்-
அழிச்சாட்டிய காரர்களுக்கு!

சில பல காரணங்களால்-
பேசாமல் இருந்தும்-
மனதார நேசிப்பவர்களுக்கும்!

வாய் கிழிய வாழ்த்தி விட்டு-
மனதுக்குள்-
புழுங்குபவர்களுக்கு!

அட்டூழியங்கள் செய்து கொண்டு-
ஆட்சி கட்டிலில்-
அலங்கரிப்பவர்களுக்கு!

அநீதி இழைக்கபட்டவன்-
நீதி கிடைக்காமலே-
இறப்பவர்களுக்கு!

அநாதை சொத்தை ஆட்டையவும்-
அவர்கள் சோத்தில் மண்ணள்ளி-
போட்டவர்களுக்கும்!

அனாதைகளிடம்-
ஆதரவாக நடந்தவர்களுக்கும்!

கோள் மூட்டி-
பல உறவுகளை-
பிரித்தவர்களுக்கு!

பிறர் மீது தவறிருந்தும்-
உறவுகள் பிரிந்திட கூடாதுன்னு-
"அதை"தாங்கி கொண்டவர்களுக்கு!

கடன் கேட்கும்போது-
அலையா அலைந்து-
கேட்க போனவனை-
அடிக்க முயல்பவனுக்கு!

வாங்கிய கடனை-
கட்ட முடியலையே-
மனம் குமுறுபவர்களுக்கு!

கட்டியவளை-
கண்ணியத்துடன்-
நடத்துபவர்களுக்கு!

கண்ணியம் எதற்கு-
கட்டியவளுக்கு-என
நடப்பவர்களுக்கு!?

நியாயவான்களுக்கு-
நியாயமும்-
அநியாயகாரனுக்கு-
தண்டனையும்-
கொடுக்க அதிகாரம்-
உலகில் யாருக்கு-
இருக்கு!?

நிச்சயமாக-
சத்தியமாக-
ஒரு நாள்-
படைத்தவனிடம்-
நியாயமான -
தீர்ப்பு இருக்கு!





Saturday 28 July 2012

பக்கத்து வீடு...



உற்றத்தாரும் ,சுற்றத்தாரும்
இருக்கலாம்-
ஊரளவு!

பரிதவிப்பின்போது-
ஓடி வருவது-
பக்கத்து வீடு-
உறவு!

"மூத்தவர்கள்"-
முக சாயலை வைத்து-
சொல்லி விடுவார்கள்-
இன்னாரென்று!

இளையர்கள்-
பக்கத்து வீட்டுக்காரன் -
பெயர் கூட தெரியாமல்-
இருக்கிறார்கள்-
இன்று!

கண்டம் விட்டு-
கண்டம்-
நேசம் கொள்கிறார்கள்!

அண்டை வீட்டுக்காரனுடன்-
சண்டை செய்கிறார்கள்!

எண்களை அழுத்தினால்-
பல மையிலுக்கு அப்பாலும்-
உடனடி தொடர்பு!

பக்கத்துல இருப்பவர்களிடம்-
பல வருட துண்டித்து போன-
உறவு!

அன்றைக்கு -
அக்கம் பக்கமே-
அன்புக்கு பிரதானமானது!

இன்றைக்கு -
"நிழல்" உறவுகளுக்கு-(சீரியல்)
எந்நேரமும் கண்ணீர்வடிப்பது!

தகப்பனுக்கு-
ஒன்னு!

தாயிக்கு-
ஒன்னு!

பிள்ளைக்கு-
ஒன்னு!

ஆளுக்கொரு-
தொலை காட்சி!

உறவுகளோ-
பாழா போச்சி!

இதுல எங்கே-
இவர்கள் வாழ-
பக்கத்துக்கு வீட்டாரையும்-
நினைச்சி!?

அன்று-
விசேசமா சமைத்தாலும்-
பக்கத்துக்கு வீட்டுக்கும்-
சேர்த்து சமைப்பார்கள்!

இன்று-
அற்ப விசயங்களுக்கும்-
பேசாமல் இருக்கிறார்கள்!

அண்டை நாடுகளுடன்-
பிரச்னை-
ஆயுத குவியலுக்கு-
உதவும்!

அண்டை வீட்டாருடன்-
சண்டை-
"வறட்டு" எண்ணங்களுக்கு-
வழி வகுக்கும்!

"அண்டை வீட்டாருக்கு-
காற்று வராதபடி-
சுவர்களை எழுப்பாதீர்கள்!

அண்டை வீட்டார்-
பசியோடு இருக்கையில்-
தான் மட்டும் வயிறு முட்ட-
தின்பவன்-என்னை சார்ந்தவன்
அல்ல-"
நபிகளார் சொன்னது!

இன்ன மதம்-
இன்ன இனம்-என
சொல்லிடாதது!

ஆதலால்-
இனம் ,மதம்,
மொழி கடந்து-
பக்கத்துக்கு வீட்டாருடன்-
பரிவோடு நடப்பது-
நன்மை பயக்கவல்லது!



Thursday 26 July 2012

வெட்டனும்......"



தேடல்-
தொடங்கியது!

சில-
கிராமங்கள்-
அடங்கியது!

சிலர்-
முறைத்தனர்!

பலர்-
வரவேற்றனர்!

பெயர்கள்-
கேட்கப்பட்டது!

உடல் அளவுகள்-
எடுக்கப்பட்டது!

தேதிகள்-
குறிக்கப்பட்டது!

அந்நாளும்-
நெருங்கியது!

"ஆட்களை"-
வாகனம்-
இறக்கியது!

புது ஆடைகள்-
அணிந்தனர்!

முகங்கள்-
மலர்ந்தனர்!

காணப்பட்டனர்-
ஒட்டிய தேகத்துடன்!
அதிக வாட்டத்துடன்!

ஆம்-
அவர்கள்-
ஏழைகள்!

"அழைத்தவர்களும்"-
இல்லை-
செல்வமிக்கவர்கள்!

பசியை அறியாதவன் அதன் -
பரிதவிப்பை அறியமாட்டான்!

வஞ்சகம் கொண்ட நெஞ்சன்-
வாஞ்சையுடன் நடக்க மாட்டான்!

தொடங்கியது-
ஊர்வலம்!

முடிவுற்றத்கு-
பள்ளிவளாகம்!

ஒவ்வொரு பெயராக-
வாசிக்கப்பட்டது!

வந்த சிறவர்கள் மனம்-
சந்தோஷ பட்டது!

பெயருள்ள சிறுவன்-
அழைத்து செல்லப்பட்டான்!

அழுது கொண்டே-
திரும்பி வந்தான்!

காரணம்-
விருத்தசேனம்(சுன்னத்)-
செய்யபட்டான்!

வந்தவர்கள்!
அழைத்தவர்கள்!
உள்ளூர் சொந்தங்கள்!

அன்போட பகிர்ந்து கொண்டு-
அரவணைப்பாக-
விருந்துண்டார்கள்!

நேரம்-
கடந்தது!

வாகனம்-
வந்தது!

சிரித்து வந்த-
பாலகன்கள் அழுது கொண்டு!

தாயோட ஒட்டி கொண்டு!

தகப்பன்மார்கள்-
வந்த கண்ணீரை -
மறைக்க முடியாமல்!

நானும் நண்பர்களோட-
வந்து சென்ற உறவுகளை-
மறக்க முடியாமல்!

பிறப்பதற்கு முன்-
தந்தையை இழந்தார்!

பிறந்து பின்னாட்களில்-
தாயை இழந்தார்!

"மறைவதற்கு" முன்-
உலகம் மறையுவரை-
மனித மனங்களை-
வென்றார்!

ஏழையாக-
வாழ்ந்தார்!

எழைகளுடனேயே-
வாழ்ந்தார்!

அவர் அரியணைகளில்-
அமர்ந்திடவில்லை!

அமர்ந்த இடங்களெல்லாம்-
அரியணையாகியது!
முஹம்மது மேத்தா(கவிஞர் மு.மேத்தா)
சொன்னார்!

அவர்தான்-
மலையளவு பகை கொண்டவர்களிடையே-
மனிதத்தை வளர்த்த-
நபிகள் பெருமானார்!

என்னருமை!
சொந்தங்களே!

ஏழைகளும்-
நம் மனித உறவுகளே!

குறைந்த பட்சம்-
ஒரு ஏழைக்காவது-
உதவுங்களேன்....!




Tuesday 24 July 2012

நோன்பு கஞ்சி.....



வரிசையாக வைக்கப்பட்ட-
நான்கு அடுப்புகள்!

கழுவி கொவுத்தி-
வைத்திருக்கும்-
சட்டிகள்!

ஒரு பக்கம்-
தேங்காய் திருக-
ஒரு கூட்டம்!

பூண்டை தோல் -
உரிக்க ஒரு-
கூட்டம்!

அரிசியை ஓட்டை-
போட்டு -எடுத்து செல்லும்
எலி கூட்டம்!

சிறு உதவிகளுடன்-
அன்றைக்கு உதவும்-
இளையர்கள்!

டேய் !-
மாப்ள!-
மருமகனே!-என
உறவு முறையுடன்-
கூப்பிடும்-
பெரியவர்கள்!

தெரிந்து செய்த-
தப்புகளுக்கு-
கிடைக்கும் பெரியவங்க-
திட்டுகள்!

அதே வயது ஒத்தவர்-
"ஏன்பா!? சின்ன பசங்கள-
திட்டுறே"!என கிடைக்கும்
ஆதரவுகள்!

திட்டுகள் நமக்கு-
ஒன்றும்-
புதிதில்ல!

அதைபற்றியெல்லாம்-
கவலை பட்டதே-
இல்லை!

ஆதரவா சொன்ன-
வார்த்தையாலே!

எங்கோ உரைக்கிறது-
பட்ட மிளகாய்-
கடித்தது போல!


உதிரும் இலைகள்-
முளைப்பதுண்டு-
கிளைகளிலே!

"உதிர்ந்த "உறவுகள்-
திரும்புவதில்லை!-
இவ்வுலகிலே!

"மறைந்த "உறவுகளை-
நினைக்கையிலே!

கண்களோ குளிக்கிறது-
கண்ணீரிலே!

இரண்டு சட்டி கஞ்சி-
ஊரில் வாங்கிட -
வருபவர்களுக்கு!

மற்ற இரண்டும்-
பள்ளியில் நோன்பு-
திறப்பவர்களுக்கு!

மாலை நேர-
வேலை-
தூக்கு சட்டியுடன்-
குழந்தைகள்!

தூக்கு சட்டிய தூக்கியவர்களை-
தூக்கி கொண்டுவரும்-
"வாப்பாக்கள்"!

அந்தி பொழுதும்-
வந்தது!

வரிசையாக வைக்க பட்ட-
நோன்பு கஞ்சிகளுடன்-
குண்டாளங்கள்!

அதன் அருகில்-
வைத்திருக்கும்-
பேரீத்தம் பழங்கள்!

பிரயாணத்தில்-
இருந்தவர்கள்!

வியாபாரம் செய்ய-
வந்தவர்கள்!

பெரிவர்கள்!
சின்னவர்கள்!

அவர்களுக்கு பிடித்த-
இடங்களில் அமர்ந்தார்கள்!

யாரையும் "ஒதுங்கிட"-
சொல்லவில்லை!

அந்த உரிமை-
எவருக்கும் இல்லை!

இறைவா!
உன்னுடைய உணவை கொண்டே-
என்னுட நோன்பை திறக்கிறேன்-
என்னிடம் இருந்து ஏற்றுகொள்வாயாக!
என்பதை அரபியில்-
சொல்லப்பட்டது!

அதனை அனைத்து-
வாய்களும் சொல்லியது!

பேரீத்தம் பழங்களை-
தின்றார்கள்!

கஞ்சிய -
குடித்தார்கள்!

எனக்கோ தோன்றிய-
சில எண்ணங்கள்!

பார பட்சம்-
காண கூடாதுன்னு-
பள்ளி சீருடை!

பாகு பாடு இல்லாம-
நோன்பை திறக்கவா!?-
நோன்பு கஞ்சி முறை...!!!?

கஞ்சி இதமான-
சூட்டுடன்-
தொண்டையில்-
இறங்கியது!

எல்லோர் பசியை போக்க-
கஞ்சி காய்ச்ச உதவியதை-
எண்ணுகையில்-
மனதின் ஓரத்தில்-
இனித்தது....!!



Monday 23 July 2012

நோன்பு காலங்களில்...$


ஊரு உலகமெல்லாம்-
சுற்றி வருவேன்!

உறங்க மட்டுமே-
வீடு வருவேன்!

மழையில் நனைந்த-
கோழியை போல-
"குன்னி" கொண்டு-
உறக்கம் கொள்வேன்!

தாயே-
பனி பெய்யும் காலத்திலும்-
கோழி ஆனமும்-
கொத்து பரோட்டாவும்-
வாங்கி வருவாள்!

"எந்திரிச்சி "வந்தால்-
என்ன !?-
கேட்டவர்கள் எத்தனையோ!

"எந்திரிச்சி" போடா-என
இதுவரை சொல்லாதவள்-
என்தாயே!

மற்றவர்களுக்கு-
நான் "எப்படியோ"-
தெரிகிறேன்!

பெற்ற தாயிக்கோ-
இன்னும் குழந்தையாகவே-
நான் தெரிகிறேன்!

தாயே-
உன் பாசத்துக்கு-
ஈடு கெட்ட என்னால்-
முடியுமா!?-
தெரியல!

உன்னை மனம்-
நோகாமல் வைத்து கொள்ள-
முடியுமான்னு-
எனக்கு தெரியல...!!!
---------------------------
சரிவர கட்டாத-
கைலியுடன்-
வரும் பாலகன்!

நச்சரிப்பு தாளாமல்-
சில்லறை எடுத்து கொடுக்கும்-
அப்பன்!

வாங்கிய காசை-
விறு விறு என போய்-
யாசகரிடம்-
கொடுக்கிறது-
பிஞ்சு கைகள்!

கண்டும் காணாமலும்-
கடந்து போனவர்கள்-
எத்தனையோ பேர்கள்-
மத்தியில்!

"பொடி பயல்"-என
நான் நினைத்தவன்!

என்னையவும்-
வெட்கித்து-
தலை குனியவைத்தவன்!

ஆம்-
கடந்து போனவர்களில்-
நானும் ஒருவன்!



Sunday 22 July 2012

முடிந்தளவாவது.....



தின்ன முடியாமல்-
திணறுபவர்கள்-
ஒரு பக்கம்!

பசியால்-
பரிதவிப்பவர்கள்-
மறுபக்கம்!

ஆயிரம் கழிவறை கொண்ட-
மாடி உள்ள-பங்களா
சொந்தம் ஒருவனுக்கு!

ஆயிரம் பேருக்கு -
ஒரு கழிவறை வீதம்-
இல்லை-
பலபேருக்கு!

உடலில் உள்ள கொழுப்புதனை-
தின்னு கொள்ளும்-
பசியால் உடம்புகள்!

உயிரையே பசியினால்-
இழக்கும் -
எத்தனையோ உடல்கள்!

உலகமெல்லாம் காண-
முடிகிறது -
பிறந்த மண்ணை விட்டு-
விரண்டோடிய மக்களை!

ஆனாலும்-
நாகரிக உலகம் என-
சொல்லிட நமக்கும்-
வெட்கம் இல்லை!

எல்லா "சத்தும் " கூடி-
மாத்திரை போடும்-
ஒரு கூட்டம்!

எந்த ஊட்ட சத்தும்-
இல்லாமல்-
மடியும் இன்னொரு கூட்டம்!

மானம் மறைக்க -
ஆடை வாங்க -
பணம் இல்லாமல்-
எத்தனையோ-
பெண்கள்!

பணத்துக்காக ஆடை-
களையும்-
எத்தனையோ-
"கேவலங்கள்"!

விலங்குகளை-
காப்பாற்ற எத்தனை-
விழிப்புணர்வுகள்!?

மனிதனையும் -
காப்பாற்ற நம்மால் ஆனா-
உதவிகளை செய்யுங்கள்!

பெருமானார் மொழி-
படைப்புகளை நேசிக்காதவனை-
படைத்தவன் நேசிப்பதில்லை!

"இருந்ததையெல்லாம்"-
தானம் செய்தார்கள்-
நம் முன்னோர்கள்!

"முடிந்தளவாவது"-
தானம் செய்யலாமே-
இன்று-
பூமியில் "இருப்பவர்கள்!"

Saturday 21 July 2012

துண்டிக்க வேணாம்...!



வந்த-
"வழியும்"!

தங்கிய-
"அறையும்"!

பால்கொடுத்த-
மார்பும்!

வளர்த்த -
சொந்தங்களும்!

அமுதூட்டிய -
கைகளும்!

பாசம் தந்த-
மனங்களும்!

எல்லாமே -
ஒண்ணுதான்!

பெற்ற பிள்ளைகளிடமோ-
குணநலன்களோ-
வேறுதான்!

நம்மோடு பிறந்து-
வளர்ந்தவர்களிடமே -
"மாறு பாடுகள்"-
என்றால்!

வரும் மருமகள்-
நம்மை போலவே-
எப்படி இருப்பாள்!?

அவள்-

பிறந்ததும்!

வளர்ந்ததும்!

பழக்க வழக்கமும்!

பேச்சு முறையும்!

வேறு பாடாக-
இருந்திருக்கும்!

இரு வேறு-
உறவுகள்!

எப்படி உடனே-
காண முடியும்-
மாற்றங்கள்!

"வந்தவள்"-
வீட்டுக்கு வந்த-
வேலைக்காரி அல்ல-
அவள்!

வாழ வந்த-
வம்ச விருத்திக்கு வந்த-
உறவு அவள்!

கணவன் -
மனைவிகளுக்கிடையே-
பிரச்சனைகள்-
குறைவு!

"இவர்களின்"உறவுகளுக்கிடையே-
பேராசைகள்தான்-
நிறைவு!

"உங்கள் "குடும்பங்களின்-
பேராசையால்!

வாழ வேண்டிய-
இரு உள்ளங்கள் வாட வேண்டுமோ-
நிராசையால்!

ஊரான் பிள்ளையை-
"ஊட்டி"வளர்த்தால்-
தன் பிள்ளையை-
"கொடைக்கானல்"வளர்க்குமா!?-என
கேட்க கூடாது!

கர்பவதியான-
மருமகளை-
ஊட்டி வளர்த்தால்-
அவள் வயிற்றில் உள்ள-
நமது உயிர் வளர்வதை-
மறந்திடலாகாது!

வாழ்வில் இரணம்-
கூடிடவும்!
ஆயுள் கூடிடவும்-
உறவுகளுடன்-
சேர்ந்து வாழுங்கள்!
நபி மொழியே!

இதை விட -
எந்த வார்த்தைகள்-
எழுதி உறவின் மேன்மையை-
நான் மொழிய..!!?



Thursday 19 July 2012

நீங்க ஆளுங்க....!!



போராட்டமாக-
தெரிந்தது-
தாய் மொழிக்கு!

பெரும் போராட்டமானது-
பிணை கிடைக்க-
மகள் "மொழிக்கு"!

கருணையில கூட-
விடுவிக்கல-
சிறுபான்மை கைதிகளை!

ஏறெடுத்து கூட-
பார்க்கல -அவர்கள்
கண்ணீர்களை!

"திகாரின்" முன்னால்-
காண முடிந்தது-
கலங்கிய கண்களை!

நாட்டு மக்களே-
குடும்பம்-
என்றவர்கள்!

குடும்பத்துக்கே-
நாடு-
என்றானார்கள்!

ஆட்சியோ-
இல்லையோ-
போயிடுவாங்க-
கொட நாடு!

மின்சாரம்-
இல்லாமலும்!

விலைவாசி-
உயர்வாலும்!

தமிழ் நாடே-
நீ!-
வாடு!

படித்த மக்கள் வேலை-
டாஸ் மாக் கடையிலே!

படிக்காதவர்கள்-
நிறுவகிக்கிரார்கள்-
கல்லூரிகளை!

"அவர்கள்" விற்றதை-
அரசு -
விக்கிறது!

அரசு-
நடத்தியதை-
"அவர்கள்"நடத்துகிறார்கள்!

கம்பீரத்துடன்-
கடன் பெறலாம்-
மாணவர்கள்!

சொல்கிறார்கள்-
அதிகாரத்தில்-
உள்ளவர்கள்!

வட்டிக்கு மேல-
வட்டியை போட்டு-
மாணவன் வாழ்வையும்-
சூனியமாக்கிடுவார்கள்!

வலிய வலிய-
கடன் கொடுத்த-
ஐரோப்பா நிலை-
என்னாச்சி!?

பொருளாதார-
மந்ததுல-
விழுந்தாச்சி!

நம்ம நாட்டு கதி-
என்னாகும்-
அண்ணாச்சி!?

கொடுக்குற மாதிரி-
கொடுப்பீங்க!

பிடுங்குற மாதிரி-
பிடுங்குவீங்க!

அதுல ஒரு-
உதாரணம்!

விவசாய கடன்-
தள்ளு படி!

ஏன் விவசாயிகள்-
தற்கொலைகள் தெரியவில்லையே-
நின்றபடி!?

மக்கள் நாங்க-
அதெல்லாம்-
மறந்துருவோம்ங்க!

நீங்களே!
"மாறி மாறி-
ஆளுங்க!!


Wednesday 18 July 2012

பயணிகள்....



வறுமையானவர்கள்!
செழுமையானவர்கள்!

பங்களாவாசிகள்!
பரதேசிகள்!

கல்விமான்கள்!
கல்லாதவர்கள்!

நியாயத்திற்காக -
செத்தவர்கள்!

நியாயத்தை-
சாகடித்தவர்கள்!

வள்ளல்கள்!
வழங்காதவர்கள்!

உத்தமர்கள்!
ஊதாரிகள்!

எழுதி -
எழுச்சி பெற-
செய்தவர்கள்!

எழுத்தில்-
விஷ அம்பை-
எய்தவர்கள்!

பொன்னானவர்கள்!
மண்ணா போனவர்கள்!

ஆண்ட மக்கள்!
அடிமை மக்கள்!

ரத்தம் பார்த்து-
துடித்தவர்கள்!

ரத்தம் பார்க்க-
துடிப்பவர்கள்!

பேச்சில் -
விளாசியவர்கள்!

"விளாசியதில்"-
மூச்சை நிறுத்தியவர்கள்!

மலை போல்-
நிமிர்ந்தவர்கள்!

மழை போல்-
விழுந்தவர்கள்!

பசிக்கு-
புசித்தவர்கள்!

புசிக்கவே-
சுவாசிக்கிறவர்கள்!

எத்தனை பேர்-
வரவு!

அத்தனை பேரும்-
செலவு!

"போனவர்கள்"-
வந்தவர்கள்!

"போக போகிறவர்கள்"-
"இருக்கிறவர்கள்"!

"வர போகிறவர்களும்"-
"போகிறவர்கள்"!

மண்ணிலிருக்கும்-
நீர் ஆவியாகிறது!

விண்ணிலிருந்து-
அதுவே-
மழையாகிறது!

இது ஒரு-
சுழற்சி முறை!

நல்லதும்-
கேட்டதும்-
தலை தூக்குவது-
உலகின் நிலை!

இன்று-
கருதிடபடுகிறார்கள்!

"இப்படிதான்"-
வாழனும் -என்பவர்கள்!
அறிவீனர்களாக!

"எப்படியோ"-
வாழ்ந்தால் சரி-என்பவர்கள்
அறிவாளிகளாக!

ஒண்ணுதான்-
நகர பேருந்தும்!
நம் வாழ்வும்!

"எங்கிருந்து புறப்பட்டோமோ"-
"அங்கேயே சேர்கிறோம்!"

பரிசோதனையாளர்-
சோதிக்கையில்-தெரியும்!
யாரிடம் பயண சீட்டு-
இல்லை- என்று!

இறப்புக்கு பின்தான்-
தெரியும்-
யார் "வாழ்ந்தது"-
சிறப்பு -என்று!


Monday 16 July 2012

"நடந்திடும்" கவிதை....!



சிரிப்பதும்-
அழுவதும்!

அழுவதற்கு முன்-
சிணுங்குவதும்!

தூக்கிட அழைத்திடும்போது-
தாயோட ஒட்டிகொள்வதும்!

அவசரகதியில் செல்லும்போது-
தூக்கிட சொல்லி-
கை அழைக்கும்போது!

பிஞ்சு விரல்களால்-
உன் தலையை -
சொரிந்து கொள்வதும்!

அவ்விரல்கள் கொண்டு-
என்தலையில்-நீ!
அடிப்பதுவும்!

என் தாயிக்கு வலிப்பதுபோல்-
உன் கையில் செல்லமாய்-
அடிப்பதுவும்!

"பெருசு"களின் -
கவலைகளை -
மொக்கை வாய் சிரிப்பிலே-
போக்குவதும்!

மடித்த ஆடைகளை-
கலைத்து போடுவதும்!

விளையாட்டு பொருட்களை-
உடைத்திடுவதும்!

நீ!
வாய் பேசிட சப்தம்-
எழுப்பிடும்போதும்!

உறவுகள் ஒவ்வொருவரும்-
"தன்னை" அழைத்ததாக-
எண்ணி கொள்வதும்!

உன்னை குளிக்க வைக்க-
நீ!- குடும்பத்தையே-
நனைந்திட வைப்பதுவும்!

உன்-
அப்பனாவது பரவாயில்லை-
உன்னை விட!

என்னை குழந்தையின்போது-
குளிக்க வைத்த ஆச்சா(பாட்டி)-
சொல்லி விட!

உன் சேட்டையோ-
என் சேட்டையை மிஞ்சி விட!

"கூடுதலா" மரியாதை-
கிடைத்து விட!

சிறுமகிழ்வு-
என் மனதோட!

என் எண்ணங்களின்-
எழுத்தை கவிதை என்கிறார்கள்!

பெருந்தன்மையாக-
பெரிய மனதுடையவர்கள்!

மழலைகளே-
உங்களது அசைவுகளெல்லாம்-
மொழி பெயர்த்திட முடியாத-
கவிதைகளாக தெரிகிறீர்கள்!


Sunday 15 July 2012

 துரத்தும்  எண்ணங்கள்....



பொத்தி வளர்த்த புள்ளை-
போதையில கிடக்குறான்-
தெரு நாயோட!

கூன் விழுந்த முதுகோட-
தாயானவள் -
தேடி அலைகிறாள்-
கவலை தோய்ந்த முகத்தோட!

அரசோ !-
"விற்றதை" சாதனையாக-
சொல்லுது-
பந்தாவோட!

சட்டமே சொல்லுது-
குற்றம் நிரூபிக்கும் வரை-
"ஒருவன்"குற்றவாளி-
இல்லை-என!

ஊடகங்கள் ஊளையிடுது-
அவனை தீவிரவாதி-
என!

"அதிகாரிகள் "சொல்வதையெல்லாம்-
வெளியிடுவதற்கு!

தட்டச்சு இயந்திரம் -
போதும் -அதற்க்கு!

"பத்திரிக்கை "என்ற-
பேர்-எதற்கு!?

"வேஷம்" கட்டுபவர்கள்-
பிறந்தநாளுக்கு-
சுற்றுலா போய்டுவார்-
வெளி நாட்டுக்கு!

"வேலை வெட்டி "இல்லாமல்-
"இவன்"கொண்டாடுறான்-
கொடுமைக்கு!

உண்ணா விரதம்-
இருக்காங்களாம்!

காரணம்-
"அவரு" படம்-
நடிக்கலையாம்!

நடித்தால் அவருக்கு-
காசு!

வேலைக்கு போனால்தான்-
உனக்கு அடுத்த வேலை-
சோறு!

"முட்டிகொள்வார்கள்-"
ஒரு வயித்தில் பிறந்தவர்கள்-
வாழும்போது!

முட்டி முட்டி அழுவார்கள்-
யாராவது ஒருவர்-
"தவறி" விட்ட போது!

தனி தொகுதி-
கொடுத்தாச்சி!

"தனி" குவளை முறை-
மாறிடிச்சி!!?

எவ்வளவோ -
அவலங்கள் -
ஒவ்வொரு நாளும்!

"அவை" அலைக்கழிக்குது-
என்னையவும்!

ஆற்று மணலில்-
சட்டை இல்லாமல்-
படுத்தும்!

வானத்தை வெறித்தே-
பார்த்தும்!

தூக்கம்தான்-
வரவில்லை!

"துரத்திய எண்ணங்கள்"-
எழுதும்வரை-
விடவில்லை!

Friday 13 July 2012

துறவறமும்- இறை வரமும்!



படைத்தவனே!
பரிபாலிப்பவனே!

உணர்ச்சி வெளிப்பாடாய்-
மானுட உற்பத்திக்கு-
வழி வகுத்தாய்!

உணர்வுள்ள மனிதனுக்கு-
"அளவோட" உணர்ச்சி-
வெளிக்காட்ட -
"வழி காட்டி"தந்தாய்!

வெள்ளத்தை -
அணை போட்டு தடுக்காவிட்டால்-
ஊருக்கு ஆபத்து!

"தடுத்தே" வைத்தால்-
அணைக்கு ஆபத்து!

அளவாக திறந்து விட்டால்-
அணையும் பிழைக்கும்!

நாடும்-
தழைக்கும்!

அது போன்றே-
நீயே!

துறவறத்தை -
வாழ்வாக்காதவனே!

வாழ்வினுள்ளே-
துறவறத்தை-
வைத்தவனே!

"படைப்புகளை"-
தவிர்த்து-
படைத்தவனை-
வணங்கிட சொன்னவனே!

ஒரு நாளைக்கு-
இருபத்து நான்கு மணி நேரம்-
வைத்தவனே!

ஐந்து நேர வணக்கத்தை-
கடமையாக்கியவனே!

ஐந்து நேரத்திற்கு ஆகும்-
நேரம்-ஐம்பது நிமிடம்தானே!

வருடத்தில் பதினோரு மாதம்-
"நல்லவற்றை புசியுங்கள்"-
என்றவனே!

ஒரு மாதகாலம்-
மட்டும் -
குறிப்பிட்ட நேரத்திற்கு-
தடை விதித்தவனே!

வட்டியை தடுத்தவனே!

வியாபாரத்தை-
ஆகுமாக்கியவனே!

"இருப்பதில்" சிறிதளவு-
"இல்லாதவர்களுக்கு"-
கொடுப்பது கடமை என்றவனே!

பொருளாதார வசதி-
இருக்குமேயானால்-
புனித யாத்திரை-
மேற்கொள்ள சொன்னவனே!

குறிப்பிட்டு-
ஒதுக்கிய நேரங்களும்!
குறிப்பிட்ட கால-
"ஒதுங்கல்"களும்!

குறிப்பிட்ட அளவு-
கொடுப்பதுவும்!
குறிப்பிட்ட அளவுக்கு மேல்-
இருக்கும்போது-
குறிப்பிட்ட இடத்திற்கு-
செல்வதுவும்!

வாழ்வையே-
துறக்கவில்லை!

வாழ்வினுள்ளே-
துறவு நிலை!

துறவு நிலையவும்-
இலகுவாக்கிய-
இறைவா !
இது உன் -
வரமே!

கடலை மையாகவும்-
மரங்களை எழுது கோலாகவும்-
ஆக்கினாலும்- உன்
கண்ணியத்தை எழுதிட முடியாதன-
சொன்னவனே!

நான்-
என்னத்த எழுதிட முடியும்-
இந்த "அற்ப"துளியில்-
வந்தவனே......!!



Thursday 12 July 2012

கெளம்பிட்டாரு....மைனரு ..!!



குளு குளு-
குளியல்கள்!

முகத்தில்-
தடவி கொண்ட-
நுரைகள்!

மழுக்கென-
செய்துகொண்ட-
முகசவரங்கள்!

சட்டை பையினுள்-
பண பையும்!

பண பையுனுள்-
பணமும்!

ஆடைக்குள்-
மனிதன் -
என்பவனும்!

மனிதனுக்குள்-
காம வெறி-எனும்
பேயும்!

வாடகை வாகனம்-
இடம் நோக்கி -
பயணிக்கும்!

இவனுள்ளே-
அம்மிருகம்-
கோர பற்களுடன்-
சிரிக்கும்!

கடந்தது-
சில புற வழி-
சாலைகள்!

தெரிந்தது-
அந்த எல்லைகள்!

பேசி முடிக்கப்பட்டது-
பேரங்கள்!

கொல்லும்-
தின்னும்!

தின்னும்போதாவது-
சாகும்!

ஒரே வலி!
ஒரே வேதனை!

மிருகங்களின்-
வேட்டை-
காட்டில்!

குதறபடுவதுண்டு!
சீரழிப்புகளும்-
உண்டு!

தினம்தினம்-
சித்திரவதை!

வேறு வேறு-
"ரூபத்தில்"நடக்கும்-
வதை!

மனிதன் என-
சொல்லி கொள்பவர்கள்-
வேட்டை-
இருட்டில்!

"வந்தவர்கள்"-
வாழ்வு தொலைந்திருக்க!

"வருபவர்கள்-
வாழ்வை தொலைக்க!

இக்காட்சியை-
காணும்போதெல்லாம்!

மனசாட்சி சொல்லும்-
இவ்வாறெல்லாம்!

"பூச்சி மருந்து-
அடித்து செத்த -
புழுகளாகவும்!"

அப்பூச்சியை தின்னுட்டு-
சாகும் குருவிகளாகவும்"!

வையகத்தில் இப்போது-
சாதாரணமாக -
பார்க்கபடுது!

"தப்புகள்"-
"சரியாக"!

"சரியானவன்"-
தப்பானவனாக!





Wednesday 11 July 2012

காதலா..!? காதலா..!?



பார்த்து-
பார்த்து!

பேசி-
பேசி!

பழகி-
பழகி!


தெருவுல போறவங்க-
பழகுறத-
பார்க்க-
பார்க்க!

புறம் பேச-
பேச!

"இவர்கள்"-
பேசியதும்-
முடியல!

பழகியதும்-
முடிக்கல!

"எல்லை"எதுதானும்-
தெரியல!

இரவிலும்-
கை பேசி!

விடிந்து-
இருட்டும் -
வரைக்கும்-
கை பேசி!

ஏற்றிய பணமும்-
தீர்ந்தது-
பேசி பேசி!

இருட்டு-
பகலாகியது!

பகல் இன்னும்-
பிரகாசம் ஆகியது!

நேரமும் காலமும்-
பாழாகியது!

செய்யும் காரியங்களை-
தள்ளி போடுபவன்-
மனிதனே!

கால நேரத்தோட-
செய்வது-
இயற்கையே!

உதிர்ந்த-
இலைகள்!

முளைபிக்க ஆரம்பித்தது-
கிளைகள்!

நாட்கள்-
நகர்ந்தது!

காலங்கள்-
கடந்தது!

அதே-
பூங்காவும்!

அதே-
காய்களும்-
கனிகளும்!

மாறாத-
மரங்கள்!

மாறிய-
மனிதர்கள்!

சந்திப்பு-
எதிர்பாராதது!

சந்தித்தது-
"அந்த"இருவர்!

அதே-
ஜோடி!

செல்கிறார்கள்-
கண்டுகொள்ளாதபடி!

அப்பெண்-
அவள் மணாளனுடன்!

அவன்-
அவனது மணாளியுடன்!

நின்றே இருந்த-
மரங்கள்!

கோபத்தில் கொட்டிய-
சில வார்த்தைகள்!

ஓ!

மானுடமே!

உண்மையை விளங்கிடனும்-
உன் மனமே!

ஷாஜகான்-
மனைவி பதினாலாவது-
பிரசவத்தில்-இறந்தாள்!

அவன் உள்ளம்-
வெதும்பியது -
பிரிந்ததால்-
பிரியத்தால்!

அங்கே -
அவன் கொண்ட-
நேசம் உண்மை!

தேசத்தின் மீது -
வைத்த பாசம்-
உண்மை!

எழுப்பினான்-
நேசத்தை-
கட்டிடமாக!

மண்ணில் நிலவொளியின்-
வண்ணமாக!

மன்னன் கொண்டது-
உண்மை காதல்!

இன்றோ-
"பெரும்பாலோர்"கொள்வது-
"பச்சையான" ஊடல்!

உங்கள்-
"ஆசையான"-
விருப்பத்திற்கு!

ஏன் இழுக்குறீர்கள்-
"அந்த தம்பதிகள் போல்"-
நாம் என பேசி-
வம்பிற்கு!?



Tuesday 10 July 2012

மௌனங்கள்"!



கொட்டிய மழையின்-
அளவு தெரிந்திடும்!

பெய்திடாத-
மேகம்-
மனதில் கிலியை-
தந்திடும்!

சொல்லிய வார்த்தை-
அர்த்தம் தந்திடும்!

வார்த்தை சொல்லாத-
மௌனம்-
வருத்திடும்!

மௌனத்தின் -
மறு பெயர்!

அமைதி!

அமைதி!

அமைதி!

என்னவளின் -
அமைதி!-

என்னை விரட்டும்-
அணையா "தீ"!

அவள்-
"கத்தி"-
பிரயோகிக்கவில்லை!

நானும்-
"கத்தி"-
தொலையவில்லை!

ஏனோ !?
அவள் மௌனித்ததில்-
என் கண்கள்-
அயர்ந்திடவில்லை!
------------------------
ஊதாரி பேச்சி-
உருப்படாத பேச்சி!

ஆத்திரக்காரன் பேச்சி-
அரை புத்தி பேச்சி!

அறிவாளியின் மௌனமோ-
அறிவின் முதிர்ச்சி!
------------------------------
கடலின் அலை-
ரசனை தரும்!

கடலின் மௌனமோ-
புயலை தரும்!
------------------

மொட்டுக்கள் மௌனம்-
களைவது-
மலர்வதற்கு!

மலைகள் மௌனம்-
களைவது!-
நில சரிவிற்கு!

பனி மலை மௌனம்-
களைவது-
கடல் மட்டம்-
கூடுவதற்கு !

அநீதியை கண்டும்-
பொங்கிடாதவன்-சமம்
பிணத்திற்கு!
-------------------
யோகியின் -
மௌனம்-
தியானம்!

"தியான பீடத்தில்"-
தீஞ்ச வாசம்-
காமம்!
------------------


Sunday 8 July 2012

பசியிலிருந்து...



அரக்க பறக்க-
ஓடுகிறோம்-
வாழ்நாள்-
முழுவதும்!

ஒரு கணமாவது-
நிதானித்திட-
மறக்கிறோம்!

சிலர் வாழ்வதற்காக-
பணத்தை தேடி கொண்டு!

பலர் பணத்தினுள்-
வாழ்வை தேடி கொண்டு!

உச்சி வெயிலின்-
உக்கிரத்தை -
அனுபவிக்காதவர்கள்-
உண்டோ!?

பசியில் கொதிக்கும்-
வயிற்றின் வலியை-
அறிந்தவர்கள்-
நம்மில் எத்தனை பேர்-
உண்டோ!?

"குடிச்சவனுக்கு"-
தெரியாது-
சாக்கடையும்!
சந்தனமும்!

பசியில இருக்கும்-
உறவுகளை-
மறக்கலாமோ-
பந்தங்களும்!
பாசங்களும்!

முதியோர் இல்லங்கள்-
பெருகி வரும்-
காலம் இது!

"முடியாதவர்களையா-"
கவனிக்க போகுது!?

அன்று -
தானிய அமைச்சர்-
அதிகமாக நோன்பிருந்தார்!

பிரதானிகளில்-
ஒருவர்-காரணம்
அறிய ஆவல் கொண்டார்!

பதிலும் கிடைத்தது-
நான் பசியின் -
வலி அறிந்தால்தான்-
மக்களின் பசியை-
புரிந்து கொள்ள முடியும்-
என்றார்!

இன்று-
"விலைவாசியை கட்டுபடுத்த-
என்னிடம் மந்திர கோல் இல்லை"

"தானியங்களை பாதுகாக்க-
சாக்குகள் இல்லை"-என
"பொறுப்பாக(!!!)-
பதிலுரைத்தவர்!

இவரை ஆதரிக்கும்-
ஒரு அணி!

"இருப்பதை"-
இடிப்பார்கள்!

"இல்லாததை"-
இருக்கு-என்பார்கள்!

சேது திட்டத்திற்கு-
பாதை - திட்டங்கள்-
வகுத்தவர்கள்!

ஆட்சி இழந்ததும்-
"சேதுவுக்கு" மத-
சாயம் பூசுபவர்கள்!

இவர்கள்-
ஆதரவில்-
ஒருவர்!

இது மற்றொரு-
அணி!

"இவர்கள்"-
"ஆண்ட போதும்"-
"ஆளும்போதும்"-
மாறிடவில்லை!

நாட்டின்-
நிலை!

இவர்கள் ஆதரிப்பவர்களால்-
மாறும் என-
நம்பலாமோ!-
இனி!?

ஆண்டிடும் காலம்தான்-
வாராத -
"பசியிலிருந்து விடுதலை"-
தர ஒரு அணி....!!


Friday 6 July 2012

கருணையிலுமா கபடம்...!?



எத்தனையோ-
மாற்றம்-
உலகிலே!

எப்போதுதான்-
மாறுமோ-
அநீதிகளே!

கடுமையாக -
நடத்தபட்டார்கள் -
கைதிகள்!

நம் பார்வைக்கு-
சுதந்திர தியாகிகள்!

வெள்ளையர்களுக்கு-
அடிமைகள்!

"அவர்கள்"ஏற்றிய-
கொடும்சட்டங்களே!

இன்றும் -
நடை முறையிலே!

அது சரி!

என்ன வித்தியாசம்-
வெள்ளைகாரர்கள்-
அடக்கு முறைக்கும்!
இப்போது-
"இருப்பவர்களுக்கும்"!

அன்றைக்கு-
அரிக்கேன் விளக்கு-
போராட்டம்-
நடந்துச்சி!

இன்றைக்கு-
சிறை நிரப்பு போராட்டம்-
நடந்துச்சி!

இரண்டுக்கும்-
என்னய்யா வேறு காரணங்கள்-
சொல்லபட்டுச்சி!?

இன்று -
சிறு மாற்றம்!

"ஆட்சி"!
"கட்சி"!

மாறியதா-?
ஜனங்களின்-
அவல காட்சி!?

எரி பொருள்-
ஏறுதாம்-
எகிறுது தேசிய-
எதிர்க்கட்சி!

விலையை நிர்ணயிக்க-
பெட்ரோலிய நிறுவனங்களுக்கே-
அனுமதி கொடுத்தது-
மக்கா!
மறந்தா போச்சி!?

ஸ்விஸ் வங்கி -
கருப்பு பணத்தை-
கொண்டு வருவாங்களாம்!

"போட்டதெல்லாம்-"
யாருங்கய்யா!,?

சுப்பனும் -
குப்பனுமாய்யா!?

மாறி மாறி-
ஆட்சி பண்ணுவீங்க!

தேர்தல் நேரத்துல-
வீர வசனம்-
பேசுவீங்க!

மக்கள் வாயில-
மண்ணை அள்ளி போடுவீங்க!

எப்படியோ-
போங்க!

தலைவர்கள் பிறந்தநாள்-
பொது மன்னிப்பில்-
"பொதுவாக" நடந்துக்கங்க!

7 வருட சிறைவாசிகள்-
பொது மன்னிப்பில்-
இடம் பெறலாம்!

அதுலயும்-
ஏன் முரண்பாடாம்!

சிறப்பு சலுகை-
கேட்கவில்லை!

அச்சலுகையில்-
சிறுபான்மையினர்களுக்கு-
ஏன் இடம் இல்லை....!?


(அர்ப்பணம்; சிறைகைதிகளுக்காக போராடும்
நல்லுள்ளங்களுக்கு...)

Thursday 5 July 2012

பருவத்திலே.....



காற்றின் ஈரப்பதம்-
மேகமாகிறது!

மழையோ-
"பருவம்"தவறினால்-
விவசாயி கன்னம்-
ஈரமாகிறது!

விவசாயிகள்-
நாட்டின் முதுகெழும்பு-
என்றார்கள்!

அதனால்தானோ-
"வளைத்து" விட்டார்கள்!?

விதைக்கிறவர்களே!

மண்ணிலே!

தேடுகிறீர்கள்!
மானுடத்துக்கு-
உணவு தானியங்கள்!

உங்கள் வாழ்வோ-
இடர்பாடுகளிடையே!

மண்ணோட -
மலந்து கிடக்க-
மது குடிக்கிரவனும்-
விக்கிரவனும்!-
அடங்கி விடுகிறான்-
கௌரவம் என்ற-
பேரிலே!
-----------------------

"பருவம் "வந்த பெண்ணை-
கரை சேர்க்க முடியாமல்!-
ஏழை தகப்பன்களின்-
கண்களே குளமாகுது!

ஏழ்மை சகோதரிகள்-
இளமையோ-
எரிதணலில் இட்ட-
தாளாகுது!

உழவெடுக்க!
வண்டி இழுக்க!

பந்தயம் ஓட!
ஜல்லி கட்டில் ஓட!

வித விதமான-
மாடுகள் விற்பனைக்கு-
சந்தையிலே!

நடு நிலை பள்ளி!
உயர் நிலை பள்ளி!

பட்டதாரி!
"பட்டத்துல" பாதி!

உள் நாடு!
வெளி நாடு!

விலை வித்தியாசப்படும்-
மாடுகள் -மன்னிக்கவும்-
மாப்பிள்ளைகள்-
விற்பனையிலே!

வளர்த்தவர்களுக்கு-
என்ன?-
உரிமை இருக்கு!?

மாடோ-
மகனோ-
போன பிறகு-
விற்பனைக்கு!

தாரை தப்பட்டைகளின்-
சப்தத்துக்கு பயந்து ஓடி-
மாட்டிடும்-பலம் கொண்ட-
யானைகள் கூட்டம்!

காசை பார்த்து-
ஆசையில் மயங்கி-
தன் மானத்தை-
இழக்கலாமோ-!,?
இளைஞர் பட்டாளம்!
-------------------------




Wednesday 4 July 2012

மகளே...



என் உயிரின்-
வழி வந்த-
உயிரே!

உயிரணு ஒன்னை-
உருவமாக்க இடம்-
தந்தவளின் -உரு
கொண்டவளே!

என் வாழ்வு-
விளங்கவில்லை-உன்
தாய் "வரும்வரை!"

என் தாயின் பாசம் -
புரியவில்லை- நீ!
எனக்கு மகளாக-
பிறக்கும் வரை!

பாடசாலை கேள்வியை-
என்னிடம்- கேட்பாய்!

தெரியாததுபோல்-
தலை அசைத்தால்-
"ஐயோ" என செல்லமாய்!

உன் தலையிலேயே-
தட்டி கொள்வாய்!

என் தாயிடம்-
அதே கேள்வியை கொண்டு-
செல்வாய்!

என் தாயோ-
வாழ்வில் பாடம்-
படித்தவள்!

வகுப்பு பாடம்-
அறியாதவள்!

என் தாயோ தெரியாது என-
தலையாட்டினாள்!

யாருக்குமே தெரியல-
என- சொல்லி கொண்டு!

பதிலை நீயே -
சொன்னாய்-
அதட்டி கொண்டு!

இங்கே நீ!
ஆசிரியை ஆனாய்!

என் தாயோ-
மாணவி ஆனாள்!

கேட்பதுண்டு-
சிலர்!

சந்தோசம் கிடைப்பது-
வெற்றியிலா! ?

தோல்வியிலா!?

வித்தியாசப்படும்-
யாரிடம் தோற்கிறோம்-
என்பதிலே!

இதுவே -
என் பதிலே!

கல்வி கற்பதில்தான்-
உள்ளது- கண்ணியம்!

ஆடை குறைப்புதான்-
சுதந்திரம் என்பது-
போலி பெண்ணியம்!

சீன தேசம் சென்றேனும்-
சீரிய கல்வியை தேடு-
நபிகளார் மொழி!

"அறியாதவர்கள்"-
விமர்சனத்திற்கும்-
அடைத்து வைப்பவர்களுக்கும்-
நபிகளார் மீதா!?-
பழி!?

என் ஈராக்குலைகலான-
பெண் குழந்தைகளே!

இன்று-
உலகில் சுதந்திரம்-
என்ற -மாயை உள்ளது!

அது-
"எப்படியும்" வாழலாம்-
என்கிறது!

வாகனம் ஓட்டுபவனுக்கே-
கட்டுபாட்டு விதிகள்-
இருக்கு!

கட்டுப்பாடு -
தேவையில்லையோ-
மனித வாழ்விற்கு!?



Tuesday 3 July 2012

யாரடி  நீ.....!?



பாலையில்-
மழையா-நீ!?

மழையில்-
அனலா-நீ!?

சாலையில்-
வேக தடையா-நீ!?

வேக தடை-
இல்லாத-
சாலையா-நீ!?

உப்பு கரிக்காத-
கடலா-நீ!,?

இனிக்கும்-
உப்பு கல்லா-நீ!?

முற்கள் இல்லாத-
மலர்வனமா-நீ!?

முள்ளில் உள்ள-
மலரின் மென்மையா-
நீ!?

கண்ணில் பட்டும்-
காந்தாத -
சலவை கட்டி-
நுரையா-நீ!?

நுரைகளால் செய்யப்பட்ட-
தொழில் நுட்ப-
"தோகையா"-நீ!?

"நீலம்" இழந்த-
வானமா-நீ!?

"நீளம்" இல்லாத-
கடலா-நீ!?

உள்ளிழுக்காத-
புதை குழியா-நீ!?

மேல்நோக்கி பாயும்-
அருவியா-நீ!?

தலை கீழாக-
எரியும் குத்து விளக்கா-நீ!?

வன்முறை செய்யும்-
காந்தியின் கைத்தடியா-நீ!?

அகிம்சை பேசும்-
அணுகுண்டா-நீ!?

ஏறுக்கு மாறாக-
சிந்திக்க வைத்தாயடி-
நீ!!

இனி-
நேருக்கு நேராய் -
என் முன்னால்-
வராதடி-நீ!!




Monday 2 July 2012

செஞ்ச பாவம்தான் என்ன....?(2 )



விடுதலை பெற்ற-
அறுபது ஆண்டிலேயே!

என்ன மாற்றம்-
வந்துவிட்டது-
நாட்டிலே!?

தேசம் என்றால்-
அனைத்து மக்களும்-
வாழத்தானே!?

ஓன்று மட்டும்-
வாழ மற்றதெல்லாம்-
அழிந்திடனுமோ!?

ஒன்றை கொன்று-
மற்றொன்று வாழ்வது-
காடு!

ஒரே பக்கம் வளர்ச்சி-
அனைத்து பக்கமும்-
தளர்வதா-நாடு!?

ஒன்று-
மக்களுக்கு வாழ-
வழி செய்யுங்கள்!

அல்லது-வாழ நினைப்பவர்களின்
வழியை -
மறைக்காதீர்கள்!

உரிமை கேட்டால்-
"பிரிவினை "-என
பிதற்றுகிறார்கள்!

அரசுகளே! நீங்களே-
நியமித்த "கமிசன்கள்"-
சொல்லவதையும்-
மறுக்குறீர்கள்!

அல்லது-
மறந்து விடுகிறீர்கள்!

ஆந்திரா தந்த-
இட ஒதுக்கீடை-
நீதி மன்றம் தடுக்குது!

"மதவெறி நாயகர்கள்"-
வழக்குகள்-
கிடப்பில் கிடக்குது!

நீதி தேவதை-
கண்களை கட்டி உள்ளது!
பாரபட்சம் பார்க்க -
கூடாதென்பதற்கா!?

இல்லை - குருடாகவே
உள்ளதை -
மறைப்பதுக்கா!?

ஏன் இப்படி-
ஒடுக்கபடுகிறது-
சமூகம்!?

எதற்கு-
ஒடுக்குதலை -செய்கிறது
அரசு நிர்வாகம்!

வாழ வழி-
இல்லை!

வேலை-
வாய்ப்பில்லை!

படிக்க-
இட ஒதுக்கீடு-
இல்லை!

ஆனால்-
குற்றமற்றவனுக்கும்-
இடம் இருக்கு-
சிறைகளிலே!

உண்மை-நிரந்தரமா
உறங்காது!

பொய்கள் எந்நாளும்-
பொழைக்காது!

சத்தியம்-
சாகாது!

அசத்தியம்-
நீண்ட காலம்-
வாழாது!

(குறிப்பு;மகாராஷ்ட்ராவில் உள்ள பதினைந்து
சிறைகளில் அடைபட்டு கிடக்கும்-
மூவாயிரம் முஸ்லிம் கைதிகளில் 70 சதவிகிதம் பேர் நிரபராதிகள்.25 .4 சதவிகிதம் வழக்காட வழக்கறிஞர் கூட இல்லை.ஆதாரம் ;Tata institute of social sciences (TISS) ஆய்வு செய்தது ;)



Sunday 1 July 2012

செஞ்ச பாவம்தான் என்ன...?(1 )



இம்மண்ணில் -
பிறந்ததா!?

இம்மண்ணை -
நேசிப்பதா! ?

எம்மண்ணில் நாம்-
பிறக்கணும் என-
முடிவெடுக்க முடியாததா!?

சிறுபான்மை-
மக்களாக-
இருப்பதா!?

பெரும்பான்மையாக-
சுதந்திரத்திற்காக-
மடிந்ததா!?

ஷாஜகான்-
நாட்டுக்கு தலைநகர்-
டில்லியை உருவாக்கியதா!?

வருமானம் கொட்டும்-
தாஜ் மகாலை-
கட்டியதா!?

ஆட்சி மாறும்போதெல்லாம்-
காட்சி மாறால்-
கொடியேற்ற உதவும்-
செங்கோட்டை அமைத்ததா!?

கப்பம் கட்டிய-
கோழைகளிடையே-
கடும்சினம் கொண்டு-
பகதூர் ஷா-விடுதலைக்காக
வீறுகொண்டதா!?

சிறையில் கிடைக்கையிலே-
தன் தவ புதல்வங்கள்-
தலையை தாம்புலதட்டில்-
கண்டும் கலங்காமல்-
இருந்ததா! ?

போராளிகள் இப்படிதான்-
காட்சி அளிப்பார்கள்-என
அவர் மகிழ்ச்சியுற்றதா!?

மரணதருவாயிலும்-
அடக்கம் செய்ய இந்தியாவில்-
இடம் இல்லையா!?-என
கலங்கியதுவா!?

"அடிபடிந்தவர்களின்"-
வாரிசுகள் - அரசபரம்பரை
என பந்தா செய்வதா!?

பகதூர் ஷாவின் குடும்பம்-
இன்றும் வாடகை வீட்டில்-
இருப்பதா!?

கவச உடைகூட-
அணிய கால அவகாசம்-
எடுத்துகொள்ளாம-"திப்பு"
போராடி மடிந்ததுவா!?

வலிகள்தான்-
எத்தனை!

வலைபதிவு-
உணருமா-!?அந்த
வலிகளை!?

(தொடரும்......)