Monday 13 February 2012

காதலர் தினம்!

பரிமாற படும்-
வாழ்த்து அட்டைகள்!

பறிபோக போகிறது-
பலரது வாழ்க்கைகள்!

அன்று -
இச்சைக்கு பிறகும்-
மிச்சம் இருந்தது-
காதலில்!

இன்று-
மிச்ச சொச்சமும்-
மிஞ்சி விரும்பபடுவது-
இச்சையே-
காதலெனும்-
கருமத்தில்!

கவிதை வடிப்பான்-
என் வாழ்வும்-
தாழ்வும் -
நீ என்று!

ஆளையே -
மாற்றி விடுவார்கள்-
காதலிப்பவர்-
போரடிக்கும்போது!

வசனங்களில் காதல்-
ரசம் கொட்டும்!

சில காலம் கழித்த பின்-
விஷ பாட்டிலே மிஞ்சும்!

ஹார் மோன் மாற்றம்தான்-
காதலென -
அறிவியல் சொல்லுது!

வாழ்வின் -
துவக்கம் என-
காதலிப்பவர்கள் -
சொல்வது!

காதலும்
கண்ணீரும் ஒன்னு-என
வரலாறு சொல்வது!

மனமும் மரியாதையும் -
மகளே நீ தான் என-
தாய் தகப்பன் எண்ணுவது!

"இன்பம்" என்பது-
ஆணுக்கும் பெண்ணுக்கும்-
ஒன்றுதான்!

"துன்பத்தில்" மாட்டுவது-
பெண்கள்தான்!

ஆண் அவன் மட்டும்தான்-
வருவான் ஓடிபோகயிலே!

பெண் குடும்ப மானம்-
தங்கைகளின் எதிர்காலம்-
அனைத்தையும் புதைத்து -
விட்டு போகிறாள்-
ஓடிபோகையிலே!

இனிக்கும் காதல்-
அப்பன் பணத்தில்-
சுத்தும்போது!

கசக்கும் காதல்-
தன் உழைப்பில்-
சோறு கூட-
சாப்பிடும்போது!

கழிசடைகளும் -
சுத்துகிறார்கள்-
காதல் என்ற பேரில்!

நம் வாழ்வையே-
 இழக்கனுமா-
காதல் என்ற சொல்லில்!?

6 comments:

  1. இனிய காதலர்தின வாழ்த்துகள் சீனி !

    என்ன காதலை இவ்ளோ வெறுக்கிறீங்க.காதல் வேணும் சீனி.எங்கும் எதிலும் காதல் வைக்கணும்.அப்பத்தான் அதிலுள்ள ஈடுபாடும் அக்கறையும் அதிகரிக்கும்.உண்மையான் காதல் கண்டிப்பாய் தேவை.அப்போதான் உறவும் இனிக்கும் !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!
      kaathalai yaarum veruppathillai
      naanum thaan- athan peril
      nadakku izhappykal eththanai!
      pakkuvame illaamal kaathalenum-
      perai solvathu apaththathil serkirathu!
      ungal karuthukkum varavukkum-
      nantri!

      Delete
  2. இதற்குத் தான் கணவனைக் காதலி / மனைவியைக் காதலி
    என்ற கொள்கை வேணும் என்பது.
    கண்டிப்பாக சீனி , மெய்/ பொய் வித்யாசம் உணரனும் .

    ReplyDelete
    Replies
    1. srawaani !
      naan ezhuthiyathin
      arththaththai sariyaa purinthu kondathukkum-
      mikka nantri!

      ungal karuththukku-
      nantrikal pala!

      Delete
  3. இன்றைய காதல் வெறும் காமத்தில் முடிந்து போகிறது...
    உண்மையான அன்பும், காதலும் எந்த ஒரு ஆணிடமும், பெண்ணிடமும் இல்லை..
    தறிகெட்டு திரியுதுங்க காதல் என்ற பெயரில்...
    நீங்கள் சொலுவது 100/100 உண்மை ...

    ReplyDelete
    Replies
    1. ano....!

      appadiyaa...!

      ungal varavukku mikka nantri!

      Delete