Wednesday 8 February 2012

படம் பார்த்த அமைச்சரு..

அத்வானி -
இந்தியாவின்-
 இதய துடிப்பையே-
"இடித்தாரு!

அதன் மூலம்-
ரத்த ஆறே -
ஓட்டுனாரு!

மத சார்பற்ற நாடுதான்-
நம்ம நாடு-
ஆனால்-
நாடே -
தன் வகைரயாவுக்கே-
சொந்தம்னு நடக்குறாரு!

அடுத்து வருபவரு-
மோடி சாரு!

தன் ஆட்சியின் கீழுள்ள-
மக்களையே -
இன சுத்திகரிப்பு-
செஞ்சவரு!

இப்ப மத நல்லினக்கதிற்கு-
உண்ணாவிரதம் இருக்குறாரு!

மராட்டியருக்கே-
மும்பை சொந்தம்னு-
சொல்லுறாரு!

பால் தாக்கரே-
என்பவரு!

நாட்டுக்குள்ளேயே-
பிரிவினை பண்ணுறாரு!

அணு ஆயுத ஒப்பந்தம்-
கூடாதுன்னு-
சொன்னாலும்
வழுக்கட்டாயமா-
ஒத்துகிட்டவரு!

ரங்கநாத் கமிசன்-
சச்சார் கமிசன்-
அமைச்சவரு!

அதை விவாதத்துக்கு-
கொண்டு வர மறுக்குறாரு!

அதிகமா குழந்தைங்க -
பசியில நம்ம நாட்டுல -
சாவுரது கவலை அளிக்கிறது!-
என பேட்டியில சொல்லுறாரு!

மனித குலத்திற்கே -
எதிரான கூடங்குளத்தில்-
அணு உலையை -
மூட சொல்ல -
மாட்டேங்குறாரு!

நம்ம பிரதமரு!

பி ஜே பி-மதவாத
கட்சின்னு சொல்லுறாரு-
கலைஞர் ரு!

குஜராத் கலவரம்-
நடக்கையில்-
கூட்டணியில்தான்-
இருந்தாரு!

கோவை கலவரம் நடக்கும்போதும்-
இவருதான் முதல்வரு!

இப்ப இந்நாள்-
முதல்வரு!

காத்தாடி -
கிரைண்டரு-
இலவசமா -
கொடுக்குறாரு!

அதை பயன்படுத்த-
கரண்டு எப்ப வரும்னு-
சொல்ல மாட்டேன் -
என்கிறாரு!

நான் ஆட்சிக்கு -
வந்தால் ஆறுமாதத்தில்-
மின்சாரம் சீர் செய்வேன்-
என்றாரு!

இப்ப உள்ள -
எதிர்க்கட்சி -
தலைவரு!

இவங்க வரிசையில-
புதுசா வந்துருக்காரு-
நீல படம் பார்த்த -
அமைச்சரு!

சொன்னாலும்-
சொல்வாரு -
நான்தான்-
அடுத்த பிரதமருன்னு!

2 comments:

  1. இவ்வளவு வேகமா கவிதை போட்டால்....தலை சுத்துது சீனி !

    ReplyDelete
    Replies
    1. hemaa avarkale!

      neengal ennai maranthuduveenga-
      enpathaal thaano-
      ennavo!

      Delete